பதிவு செய்த நாள்
04
செப்
2017
01:09
புதுச்சேரி: மொரட்டாண்டி சனி பகவான் கோவிலில், குரு பெயர்ச்சி விழா நேற்று நடந்தது. குரு பகவான், கன்னி ராசியில் இருந்து துலாம் ராசியில் பிரவேசிக்கிறார். அதையொட்டி, புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டியில் உள்ள 27 அடி உயர பஞ்சலோக சனீஸ்வர பகவான் கோவிலில், குரு பெயர்ச்சி விழா நடந்தது. குரு பெயர்ச்சி தினமான நேற்று காலை, குருசாந்தி ஹோமம், நவக்கிரக சாந்தி ஹோமம், நட்சத்திர, ராசி, தட்சிணாமூர்த்தி ஹோமங்கள் நடந்தது. 1008 லிட்டர் பால் அபிஷேகம், மாலை 6:00 மணிக்கு கலச அபிஷேகம், 1008 கிலோ சுண்டல் நிவேதனம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. வரும் 15ம் தேதி வரை தினமும் லட்சார்ச்சனை நடக்கிறது. ஏற்பாடுகளை லலிதாம்பிகை வேதசிவாகம டிரஸ்ட் நிறுவனர்கள் சிதம்பர குருக்கள், கீதாசங்கர குருக்கள், கீதாராம் குருக்கள் செய்திருந்தனர்.