Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இரும்பாலை பணியாளர்கள் சார்பில் ... சிவன், முருகன், விஷ்ணு சிலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுவாமிமலையில் டிச.,8ல் திருக்கார்த்திகை தீபம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 டிச
2011
11:12

கும்பகோணம்: முருகனின் ஆறுபடை வீடுகளில் நான்காவது படைவீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் திருக்கார்த்திகை தீபக்காட்சி டிச., 8ம் தேதி இரவு நடைபெற உள்ளது. கும்பகோணம் அருகே வாமிமலை சுவாமிநாத சுவாமி கே õவில் முருகன் எழுந்தருளியுள் ள படைவீடுகளில் நான்காவது படை வீடாகத் திகழ்கிறது. மூர் த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்புடையது. இத்தகை ய சிறப்புடைய இத்தலத்தில் தி ருக்கார்த்திகை தீப திருவிழா இ ன்று 30ம்தேதி காலை 9.30ம ணி க்கு மேல் 11மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதை தொடர்ந்து சுப்பிரமணியசுவாமி பரிவாரங்களுடன் மலைக்கோயிலிலிருந்து உற்சவமண்டபம் எழுந்தருளல் நடக்கிறது. அன்றிரவு படிச்சட்டத்தில் திருவீதியுலாவும், திக்பந்தனமும் நடக்கிறது.
வரும் டிச.,1ம்தேதி முதல் 7ம்தேதி வரை காலை, மாலை இரு வேளைகளிலும் படிச்சட்டத்திலும், இடும்ப, பூத, ஆட்டுக்கிடா, யானை, காமதேனு, வெள்ளிக்குதிரை வாகனங்களில் சுவாமி திருவீதியுலா நடக்கிறது. வரும் டிச., 4ம்தேதி காலை படிச்சட்டத்திலும், இரவு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெறுகிறது. இந்த புறப்பாட்டின்போது விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், சுப்பிரமணியசுவாமி வெள்ளி மயில் வாகனத்திலும், சண்முகசுவாமி தங்கமயில் வாகனத்திலும், பாலசுப்பிரமணியசுவாமி வெள்ளி மயில்வாகனத்திலும், சண்டிகேசுவரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும், சப்பரத்தில் திருவீதியுலாவும் நடக்கிறது. இதில், திருக்கார்த்திகை தினமான டிச., 8ம்தேதி காலை 9 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. இரவு 9மணிக்கு தீபக்காட்சி கோலாகலமாக நடக்கிறது. தங்கமயில் வாகனத்தில் சுப்பிரமணியர், வள்ளி, தேவசேனா, வெள்ளி மயில் வாகனத்தில் பாலசுப்ரமணியர் திருவீதி புறப்பாடு நடக்கிறது. டிச., 9ம்தேதி சுவாமி திருவீதியுலாவும், காவிரியில் தீர்த்தவாரியும், இரவு கொடியிறக்கம் நடைபெற உள்ளது. டிச., 10ம்தேதி இரவு சுவா மி யதாஸ்தானம் சேருகிறார். இவ்விழா நாட்களில் வேதபாராயணம், திருமுறைபாராயணம், சிறப்பு சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி சிறப்பு நாதஸ்வர இன்னிசை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் மற்றும் இணை ஆணையர் சுவாமிநாதன், துணை ஆணையர் புகழேந்தி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், - கும்பகோணத்தில் உலக பிரசித்தி பெற்ற ஆதிகும்பேஸ்வரர் கோவில் உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ... மேலும்
 
temple news
கார்த்திகை மாதம் வளர்பிறை வருவது கைசிக ஏகாதசியாகும். இந்த ஏகாதசியன்று தான் யோக நித்திரையிலிருந்து ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் மலைப்பகுதியில் மழை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா 7ம் நாள் தேரோட்டத்தில் முதலில் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம் குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் செம்பை சங்கீத உற்ஸவம் நடந்தது.குருவாயூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar