Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பரமக்குடி முத்தாலம்மன் கோயில் ... வத்திராயிருப்பு மாதங்கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம் வத்திராயிருப்பு மாதங்கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அய்யலூர் கோயிலில் காமிரா கண்காணிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 செப்
2017
03:09

வடமதுரை : அய்யலுார் வண்டிகருப்பண சுவாமி கோயில் காமிரா கண்காணிப்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அய்யலுார் அடுத்த தங்கம்மாபட்டியில் வண்டிகருப்பணசுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் இந்துசமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோயில் தற்போது வளர்ச்சி கண்டு அதிக பக்தர்கள் வருவதால் பலவகைகளிலும் வருமானம் அதிகரித்துள்ளது. தற்போது பூசாரிகள் தரப்பினருக்கும், நிர்வாகம் செய்யும் தரப்புக்கும் இடையே பிரச்னை உருவானது. வளாகத்தில் இருந்த அறங்காவலர் கார் மாயமான சம்பவத்திற்கு பின்னர் பனிப்போர் உச்சத்தை எட்டியது. ஒரு தரப்பினர் கோயில் உண்டியல் பணம் திருடப்படுவதாகவும், மற்றொரு தரப்பினர் பக்தர்களிடம் முறைகேடாக அதிக பணம் வசூலிப்பதாகவும் குற்றம் சாட்டினர். இதற்கிடையே பூசாரிகளை மாற்ற அறங்காவலர் தரப்பு முயன்றது. இதனால் சில பூசாரிகள் பணி அங்கீகாரம் கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இப்பிரச்னைகளால் இரு தரப்பினர் இடையே மோதல் அபாயம் ஏற்பட்டு பதட்டம் நிலவியது. தாசில்தார் தசாவதாரம் தலைமையில் நடந்த அமைதி கூட்டத்தில், கோர்ட் உத்தரவு வரும் வரை செயல் அலுவலரே தற்காலிக பூசாரிகளை நியமித்து பூஜைகள் நடத்துவது; காமிராக்கள் நிறுவுவது’ என முடிவானது. இதனையடுத்து கோயில் வளாகம் முழுவதும் பல இடங்களில் ’சிசிடிவி’ காமிரா நிறுவி கண்காணிக்கும் பணி நடக்கிறது.
சின்னதாராபுரத்தில் கஞ்சிக்கலய ஊர்வலம்

சின்னதாரபுரம்: க.பரமத்தி அடுத்த சின்னதாராபுரத்தில், ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில், கஞ்சிக்கலய ஊர்வலம் நடந்தது. மாவட்ட தலைவர் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார். இந்த ஊர்வலம், அரசு கால்நடை மருந்தகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள் வழியாக வழிபாட்டு மன்ற கோவிலை சென்றடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, கஞ்சிக்கலயம், அக்னி சட்டி மற்றும் முளைப்பாரிகளை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். பின் வேள்வி பூஜை நடத்தி வழிபட்டனர். பூஜை முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று ஹரிதாள கவுரி விரதம். கவுரி விரதம் இருப்பவர்கள் சகல செல்வங்களையும் பெறுவர். இன்று சிவ சக்தியை ... மேலும்
 
temple news
சிவகங்கை; பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பிட்டுக்கு மண் சுமந்த ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி கோயிலில் திருக்கூடல்மலை ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், 48 நாள் நடந்த மண்டல பூஜை, 1,008 கலச அபிஷேகத்துடன் நேற்று ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள், வக்பு வாரியம் உரிமை கோரும் நிலங்கள் குறித்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar