ஊத்துக்கோட்டை: பாளையத்தம்மன் கோவிலில், 27ம் ஆண்டு, தீமிதி திருவிழா, வரும், 13ம் தேதி நடைபெற உள்ளது. பூண்டி ஒன்றியம், பென்னலுார்பேட்டை கிராமத்தில் உள்ளது பாளையத்தம்மன் கோவில். இங்கு ஒவ்வொரு ஆண்டும், ஆடி மாதம், தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு, வரும், 13ம் தேதி, 27ம் ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற உள்ளது. இதில் திரளான பக்தர்கள் காப்பு தீமிதிப்பர். இதையொட்டி, விழாவிற்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கிராம பெரியோர்கள் செய்து வருகின்றனர்.