Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news திருமணத்தடை நீக்கும் ராமலிங்க ... பாதுார் அய்யனார் கோவிலில் சுவாமி குதிரை சவாரி உற்சவம் பாதுார் அய்யனார் கோவிலில் சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுவாமி அலங்காரத்தில் ஆனந்தம்: பரவசப்படுகிறார் வினோத்
எழுத்தின் அளவு:
சுவாமி அலங்காரத்தில் ஆனந்தம்: பரவசப்படுகிறார் வினோத்

பதிவு செய்த நாள்

09 செப்
2017
12:09

அருப்புக்கோட்டை: கோயில்களில் சென்று வழிபாடு செய்வது இன்று அதிகமாகி விட்டது. அனைத்து கடவுள்களும் அலங்கார பிரியர்கள் என்றே சொல்லலாம்.   சுவாமியை நன்கு அலங்காரம் செய்து அசத்துவதில் பல கோயில் குருக்கள் உள்ளனர். சுவாமியை அலங்காரம் செய்து விட்டு பார்க்கும் போது, சுவாமியே நேரில் வந்து விட்ட தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அலங்காரம் இருக்கும்.  அந்த வகையில் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயில் குரு வினோத்,  சுவாமிகளை அலங்காரம் செய்வதில் வல்லவர். இக்கோயிலில் உள்ள மீனாட்சி, சொக்கநாதர், பிள்ளையார், சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி உட்பட சுவாமிகள் இவருடைய அலங்காரத்தில் அற்புதமாக காட்சி தருவர்.  சிறு வயதில் இருந்து கோயில் பணிகளில் ஈடுபட்டுள்ள இவர், பிள்ளையார்பட்டி வேத பாட சாலையில்  5 ஆண்டு வேதங்கள் படித்துள்ளார். சந்தனம், அரிசி மாவு, விபூதி, குங்குமம், பூக்கள் ஆகியவற்றை பயன்படுத்தி அலங்காரம் செய்கிறார்.

வினோத், “சுவாமியை அலங்காரம் செய்வதில் எனக்கு ஈடுபாடு உண்டு. கற்பனை கலந்து சந்தனம்,  விபூதி, பூக்கள் கொண்டு அலங்காரம் செய்வேன். சிறிய சுவாமி சிலை என்றால் 1 மணி நேரத்தில் அலங்காரம் செய்து விடுவேன். பெரியதாக இருந்தால் நேரம் ஆகும். விழா காலங்களில் என் சகோதரர் பாபு குருக்களுடன் சேர்ந்து அலங்காரம் செய்வேன். இதுதவிர, கும்பாபிஷேகம், கணபதி பூஜை, திருமணம் உட்பட விசேஷ நிகழ்ச்சிகளுக்கு செல்வதுண்டு. பய பக்தியுடன் செய்தால், எல்லாமே சாத்தியம்,”என்றார். இவரை 98944 96237 ல் தொடர்பு கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சிதம்பரம்: குடியரசு தின விழாவையொட்டி,சிதம்பரம் நடராஜர் கோவில் கிழக்கு கோபுரத்தில் பொது ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் நாட்டார்கள் காவடிக்கு பொது மக்கள் சார்பில் வரவேற்பு ... மேலும்
 
temple news
 பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூச விழா பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதன் ... மேலும்
 
temple news
அவிநாசி: ரதசப்தமி விழாவையொட்டி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், ஸ்ரீ ஆனந்தவல்லி தாயார், ஸ்ரீ ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: ஜன. 26–: ஊத்துக்கோட்டை அருகே கரியமாணிக்க பெருமாள் கோவிலில் ரத சப்தமி விழாவை ஒட்டி, உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar