Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் நாளை! பழநி உண்டியல் எண்ணிக்கை மாதம் இருமுறை நடத்த திட்டம்! பழநி உண்டியல் எண்ணிக்கை மாதம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் புதிய அன்னதான மண்டபம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

02 டிச
2011
11:12

ஆனைமலை : ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் அன்னதான திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில் புதிய மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. கோவிலுக்கு வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தரிசனத்திற்காக அதிகளவு வந்து செல்கின்றனர். கோவில் நிர்வாகம் சார்பில் தமிழக அரசின் அன்னதான திட்டம் பல ஆண்டுகளாக பக்தர்களுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நன்கொடையாளர்கள் மூலமும், நன்கொடையாளர்கள் இல்லாத நேரத்தில் கோவில் நிர்வாகத்தின் சார்பிலும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு பக்தர்களிடையே அதிக வரவேற்பு உள்ளது. அமாவாசை உட்பட கோவிலில் சிறப்பு வழிபாடு நடக்கும் நாட்களில் அன்னதான மண்டபத்தில் அதிகளவு கூட்டம் சேர்வதால் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உருவானது. இதற்கு தீர்வு காண இந்து அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் வளாகத்தில் புதிதாக அன்னதான மண்டபம் கட்டும் பணி தற்போது நடந்துவருகிறது.

கோவில் உதவி ஆணையர் ரமேஷ் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் கூறியதாவது: கோவிலுக்கு வரும் பக்தர்கள் நீண்ட நேரம் அன்னதானத்திற்காக காத்திருப்பதை தவிர்க்க பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதிய அன்னதான மண்டப கட்டுமான பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வரும் நிலையில் அதிகளவு பக்தர்கள் ஒரே நேரத்தில் உணவருந்த முடியும். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பது தவிர்க்கப்படும் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், - கும்பகோணத்தில் உலக பிரசித்தி பெற்ற ஆதிகும்பேஸ்வரர் கோவில் உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ... மேலும்
 
temple news
கார்த்திகை மாதம் வளர்பிறை வருவது கைசிக ஏகாதசியாகும். இந்த ஏகாதசியன்று தான் யோக நித்திரையிலிருந்து ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் மலைப்பகுதியில் மழை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா 7ம் நாள் தேரோட்டத்தில் முதலில் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம் குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் செம்பை சங்கீத உற்ஸவம் நடந்தது.குருவாயூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar