துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) - வாகன யோகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14செப் 2017 03:09
நல்ல மனதிற்கு சொந்தக்காரரான துலாம் ராசி அன்பர்களே!
சுக்கிரன் அக்.10 வரையும், செவ்வாய் அக்.15 வரையும், நன்மை தரும் நிலையில் உள்ளனர். புதன் செப்.22 வரை நன்மையை வாரி வழங்குவார். செயலில் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார வளம் சிறக்கும். சமூகத்தில் மரியாதை உயரும். புதிய வீடு, கார், பைக் போன்ற வாகனம் வாங்க யோகம் கூடி வரும்.
குடும்பத்தில் சுக்கிரனால் யோக பலன் கிடைக்கும். சொந்தபந்தங்கள் வருகை இருக்கும்.புதனால் மாத தொடக்கத்தில் அனுகூலமான போக்கு இருக்கும். தம்பதியிடையே ஒற்றுமை நிலவும். விருந்து விழா என சென்று வருவீர்கள். உறவினர் வகையில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். செப்.23,24ல் பெண்களால் பெருமை சேரும். அவர்களால் பொன், பொருள் கிடைக்கும். செப்.18,19, அக்.15,16,17ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் செப்.30, அக்.1ல் அவர்கள் வகையில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.
உடல்நலனில் அக்கறை காட்ட வேண்டியது அவசியம். பயணத்தின் போது சற்று கவனம் தேவை. அக்.14 க்கு பிறகு பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் வரலாம். சிலருக்கு பண விரயம் ஏற்படலாம்.
தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகம் கிடைக்கும். செப்.22க்கு பிறகு எதிரிகளால் தொல்லை உருவாகலாம். முயற்சிகளில் தோல்வியை சந்திக்கும் நிலை ஏற்படலாம். செப்.20,21,22,25,26ல் சந்திரனால் தடைகள் குறுக்கிடலாம். அக்.5,6ல் எதிர் பாராமல் வருமானம் வர வாய்ப்புண்டு. பகைவரை வெற்றி கொள்ளும் ஆற்றல் உண்டாகும்.
பணியாளர்கள் வெகுவாக முன்னேற்றம் காண்பர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை அக்.15க்குள் கேட்டு பெறுவது நல்லது. தனியார் துறையில் இருப்பவர்கள் திருப்திகரமான நிலையில் இருப்பர். மேலதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும். செப்.17, அக்.13,14ல் எதிர்பாராத நன்மை உண்டாகும். சிலருக்கு விரும்பிய இட, பணிமாற்றம் கிடைக்க வாய்ப்புண்டு. செப்.22க்கு பிறகு அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆனால் உங்கள் திறமைக்கு ஏற்ற கவுரவம் கிடைக்கும். கையெழுத்தாகும். அக்.10க்கு பிறகு புதிய ஒப்பந்தம் பெற தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். புகழ் பாராட்டு தட்டி பறிக்கப்படலாம். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். அக்.2,3,4ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்களுக்கு புதன் சாதகமாக இருப்பதால் போட்டிகளில் வெற்றி கிடைக்கும். கல்வியில் சிறப்பான நிலையை காணலாம். செப்.22க்கு பிறகு அதிக சிரத்தை கொண்டு முன்னேற வேண்டியதிருக்கும். ஆசிரியர்களின் அறிவுரையை பின்பற்றுவது நல்லது. விவசாயிகள் நற்பலன் கிடைக்கப் பெறுவர். குறிப்பாக நெல், கோதுமை, சோளம், மானாவாரி பயிர்கள் நல்ல மகசூல் கொடுக்கும். கருப்பு நிற தானியம் பயிரிடுவதை தவிர்க்கவும். கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் விரைவில் கைகூடும். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். அக்.14க்கு பிறகு வழக்கில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.
பெண்களின் பங்களிப்பு குடும்பத்தில் அதிகரிக்கும். சகோதரிகள் உறுதுணையாக செயல்படுவர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான நன்மை காண்பர். சிலருக்கு புதிய பதவி தேடி வரும். சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு, வங்கி கடன் எளிதாக கிடைக்கும். செப்.22க்கு பிறகு குடும்பத்தில் பிரச்னை வரலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுகொடுத்து போகவும். அண்டை வீட்டார் வகையில் கருத்துவேறுபாடு ஏற்படலாம். செப்.27,28,29ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனம் வர பெறலாம். அக்.7,8 ஆகிய நாட்கள் அனுகூலமானதாக அமையும்.