Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் ... ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நைவேத்தியம் படி அளக்கும் அன்னை பட்டினி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுரகிரியில் செப்.21 முதல் நவராத்திரி திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
சதுரகிரியில் செப்.21 முதல் நவராத்திரி திருவிழா துவக்கம்

பதிவு செய்த நாள்

15 செப்
2017
09:09

வத்திராயிருப்பு: சதுரகிரி மலையில் பிரசித்தி பெற்ற நவராத்திரி திருவிழா செப். 21 ல் காப்புக்கட்டுடன் துவங்கவுள்ளது. இம்மலையில் சுயம்புவாக எழுந்தருளிய சுந்தரமகாலிங்கம், சித்தர்களால் வடிவமைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமி கோயில்கள் உள்ளன.  

இங்கு ஆடி அமாவசை, தை அமாவாசை, சிவராத்திரி விழாக்கள் விமரிசையாக நடைபெறும்.  இவை அனைத்தும் சுவாமிகளுக்கான திருவிழாவாகும்.  இங்கு ஒரேயொரு பெண் தெய்வமாக தனி சன்னதியில் ஆனந்தவல்லியம்மன் எழுந்தருளியுள்ளார்.   அவருக்காக கொண்டாடப்படுவது நவராத்திரி திருவிழாவாகும்.   காப்புக்கட்டுடன் துவங்கி 10 நாட்கள் இத்திருவிழா நடைபெறும்.  இதில் அம்மன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.  அத்துடன் கொலுமண்டபத்தில் கொலுபஜனை வழிபாடும்,  சிறப்பு பூஜைகளும் நடைபெறும் இறுதிநாளில் அம்மன் அம்மன் மகிசாஷ்வர அரக்கனை அம்பு எய்து அழிக்கும் அம்புவிடுதல் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறும்.  இவ்விழாவுடன் சரஸ்வதிபூஜை, ஆயுதபூஜை சிறப்பு வழிபாடுகளும் நடைபெறும்.  எனவே விழா நடைபெறும் அனைத்து நாட்களிலும் கோயில் முழுவதும் கோலாகலமாக பக்தர்கள் நிறைந்து காணப்படும்.  பிரசித்தி பெற்ற இவ்விழா செப். 21 வியாழன் அன்று அதிகாலை 3 மணிக்கு காப்புக்கட்டு வைபவத்துடன் துவங்குகிறது.    செப்.29 ல் சரஸ்வதிபூஜை வழிபாடும்,  செப்.30 ல் விஜயதசமி வழிபாடும், அன்று மதியம் 2 மணிக்கு அம்புவிடுதல் நிகழ்ச்சியும் யந்திரம் வழங்குதலும் நடைபெறவுள்ளது.  இத்திருவிழாவிற்கான அழைப்பிதழ்கள் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு கடந்த இருநாட்களாக வினியோகிக்கப்பட்டு வருகின்றன.  ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் அறிவழகன், அறநிலையத்துறை அதிகாரிகள், ஏழூர் சாலியர் சமுதாயத்தினர் செய்துவருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உஜ்ஜைன்; மத்தியப் பிரதேசம், உஜ்ஜைனி மகாகாளேஸ்வரர் கோயிலில் ஷரத் பூர்ணிமாவை முன்னிட்டு கீர் வைத்து, ... மேலும்
 
temple news
சுசீந்திரம்: திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் நடைபெற்ற நவராத்திரி விழாவிற்கு சென்றிருந்த ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் ... மேலும்
 
temple news
பண்ருட்டி; திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 
temple news
கோவை; பாரத தேசத்தின் பாதுகாப்பு மற்றும் பாரத மக்களின்  நலன்வேண்டி காரமடை அருகே உள்ள எல்லை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar