ஸ்ரீபெரும்புதூர்: குபேர சாய் ஜெகன் மாதா மந்திரில் மஹாளாய அமாவாசை தினத்திற்காகவும், காசி செல்லும் பக்தர்களுக்காகவும், விஷேச ஹோமம் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து உற்சவர் குபேரசாயிக்கு அபிஷேகம், அலங்காரம், பஜனையுடன் மகா தீபராதனையும் - காசி செல்லும் பக்தர்களுக்கு காப்புகட்டும் நிகழ்வும், அன்னதானமும் சிறப்பாக நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் சாய் பச்சையும் அறங்காவலர் குழுவினரும் ஏற்பாடு செய்திருந்தனர்.