கீழக்கரை: பெரியபட்டினம் மகான் செய்யதலி ஒலியுல்லாஹ் தர்காவில் 116ம் ஆண்டு மதநல்லிணக்கத்திற்கான சந்தனக்கூடு விழா கொடியிறக்கம் நேற்று மாலை நடந்தது. செப்., 8 அன்று மாலை முதல் இரவு 10 மணிவரை மவுலீது எனும் புகழ்மாலை ஓதும் நிகழ்ச்சியும் பின்னர், சிறப்பு கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. மறுநாள் செப்., 9 அதிகாலை 4 மணியளவில் ஜலால் ஜமால் ஜும்மா பள்ளிவாசலில் இருந்து, மேளதாளங்கள் முழங்க, வாண வேடிக்கைகளுடன் சந்தனக்கூடு ஊர்வலம் நடந்தது. நேற்று மாலை 50 அடி உயரமுள்ள நீண்ட மினார் கோபுரத்தில் கொடியிறக்கம் நடந்தது. தப்ரு எனும் பிரசாதம் வழங்கப்பட்டது. அனைத்து சமுதாய மக்களும் திரளாக பங்கேற்றனர். ஏற்பாடுகளை சந்தனக்கூடு விழா கமிட்டியாளர்கள், பெரியபட்டினம் சுல்தானியா சங்கத்தினர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.