செங்கல்பட்டு: நென்மேலியில், நாராயண பெருமாள் கோவிலில், மகாளய அமாவாசை யொட்டி, முன்னோர்களுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர்.செங்கல்பட்டு அடுத்த, நென்மேலி கிராமத்தில், ஸ்ரீ லட்சுமி நாராயணபெருமாள் கோவில் உள்ளது. 800 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் தர்ப்பணம் செய்ய ஏராளமானோர் நேற்று திரண்டனர்.நேற்று காலை, 6:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகத்துடன் துவங்கிய நிகழ்ச்சியில், சென்னை மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஏராளமானோர் பங்கேற்று, பித்ரு பூஜை செய்து வழிபட்டனர்.