Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராமேஸ்வரம் கோயிலில் இன்று ... சரஸ்வதி வேள்வி பங்கேற்க அழைப்பு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நரசிம்மர் கோவிலில் நவராத்திரி விழா துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 செப்
2017
01:09

நாமக்கல்: நாமக்கல்லில், பிரசித்தி பெற்ற நாமகிரி தாயார், நரசிம்மர் சுவாமி கோவிலில், இன்று காலை துவங்கும் நவராத்திரி விழா, 30 வரை நடக்கிறது. நாள்தோறும் காலை, 8:00 மணிக்கு அரங்கநாயகி தாயார், பேட்டை திருவீதி புறப்பாடு, 9:00 மணிக்கு, நாமகிரி தாயார் கோட்டை திருவீதி புறப்பாடு நடக்கும். அதேபோல், இரவு, 7:00 மணிக்கு நரசிம்மர் சுவாமி, சிறப்பு அலங்காரத்தில் தாயார் சன்னதியில் சிறப்பு தீபாராதனை நடக்கும். இன்று, மச்சாவதாரம்; நாளை, கூர்மாவதாரம்; 22ல், வாமனாவதாரம்; 23ல், ரங்கமன்னார் திருக்கோலம்; 24ல், ராமாவதாரம்; 25ல், கிருஷ்ணாவதாரம்; 26ல், பரமபதநாதன் அலங்காரம்; 27ல், விசேஷ அலங்காரம்; 28ல், மோகன அவதாரம், 29ல், ராஜாங்க சேவையில் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். செப்., 30 இரவு, 7:00 மணிக்கு அரங்கநாதரும், நரசிம்மரும் கமலாலய குளக்கரையில் எழுந்தருளி அம்பு போடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. தினமும் இரவு, 7:30 மணிக்கு, மாணவ, மாணவியர் பங்கேற்கும் இன்னிசை மற்றும் வீணை, நாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நாமகிரி தாயார் மண்டபத்தில், நவராத்திரி கொலு நடைபெறுகிறது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் ரமேஷ், தக்கார் கிருஷ்ணன், பக்தர்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 10:45 – 11:45 மணி.இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: மார்கழி கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நடந்தது.  ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை, உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரிய கோவில் வளாக தரையில், மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar