பதிவு செய்த நாள்
22
செப்
2017
01:09
திருத்தணி : ஷீரடி சாய்பாபா கோவில்களில் நேற்று பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. திருத்தணி ஒன்றியம், கே.ஜி.கண்டிகை சாய்பாபா நகரில், ஷீரடி சாய்பாபா கோவிலில், நேற்று வியாழக்கிழமையை ஒட்டி மூலவருக்கு பாலாபிஷேக விழா நடந்தது. விழாவை ஒட்டி, அதிகாலை, 5:00 மணிக்கு, சுப்ரபாதம், 5:30 மணிக்கு காகட ஆரத்தி நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு பால் அபிஷேகம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் சாய்பாபாவிற்கு பால் அபிஷேகம் செய்தனர். மதியம், 12:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலையில் சத்திய ஆரத்தி மற்றும் சேஜ் ஆரத்தி நடந்தது. அதுபோல, தலையாறிதாங்கல் ஷீரடி சாய்பாபா கோவிலிலும் நேற்று மூலவருக்கு, 108 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, வண்ணமலர்களால் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம், 12:00 மணிக்கு மதிய ஆரத்தியும், மாலை, 6:00 மணிக்கு சேஜ் ஆரத்தியும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர். இதே போல் நகரி பகுதியில் அமைந்துள்ள சாய் பாபா கோவிலிலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது.