திருப்பதி பிரம்மோற்சவத்தில் சுவாமிக்கு நீராட்டு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25செப் 2017 12:09
திருப்பதி: திருமலை பிரம்மோற்சவ விழாவின் மூன்றாம் நாளான இன்று (செப் 25ல்) விழாவின் ஒரு கட்டமாக கோவிலுனுள் சுவாமிக்கு நீராட்டு விழா நடைபெற்றது.மஞ்சள் ரோஜா,உலர் திராட்சை, நெல்லி உள்ளிட்டவைகளாலான மாலை சார்த்தப்பட்டது.
திருமலை திருப்பதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா செப்டம்பர் 23ல் கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றுவருகிறது. முக்கிய நிகழ்வான கருட சேவை செப்டம்பர் 27ம் தேதியும், தேரோட்டம் 30ம் தேதியும் நடக்கிறது. பிரம்மோற்சவ விழாவின் ஒரு கட்டமாக, மூன்றாம் நாளான இன்று (செப் 25ல்) கோவிலுனுள் சுவாமிக்கு நீராட்டு விழா நடைபெற்றது.மஞ்சள் ரோஜா,உலர் திராட்சை,நெல்லி உள்ளீட்டவைகளாலான மாலை சார்த்தப்பட்டது. சிம்மவாகனத்தில் யோகநரசிம்மர் அவதாரத்தில் உற்சவரான மலையப்பசுவாமி வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் இடம் பெற்று மாடவீதிகளில் மயில் நடன மாடியும், சுவாமி வலம்வரும் மாடவீதியில் சங்கொலி எழுப்பியபடியும் ஏராளமான பக்தர் வலம்வந்து தரிசனம் செய்தனர்.