திருப்பதி பிரம்மோற்சவம் 6ம் நாள்: அனுமன் வாகனத்தில் சுவாமி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28செப் 2017 03:09
திருப்பதி: திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் ஆறாம் நாளான இன்று (செப்.28ல்) மலையப்பசுவாமி அனுமன் வாகனத்தில் வலம்வந்து பக்தர்ளுக்கு அருள்பாலித்தார்.
திருமலை திருப்பதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா செப்டம்பர் 23ல் கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றுவருகிறது. முக்கிய நிகழ்வான கருட சேவை செப்.27ல் நடைபெற்றது. பிரம்மோற்சவ விழாவின் ஆறாம் நாளான இன்று (செப்.28) மலையப்பசுவாமி அனுமன் வாகனத்தில் வலம்வந்து பக்தர்ளுக்கு அருள்பாலித்தார். அனுமன் வாகனம் என்பதால் பக்தர்கள் பலர் அனுமன் வேடமிட்டு வந்தனர். சுவாமியை ஜீயர் தலைமையில் பாசுரம் பாடி மாடவீதிகளில் அழைத்துச் சென்றனர். தமிழக கலைக்குழுவினர் காவடி ஆட்டம் ஆடிவந்தனர். தேரோட்டம் 30ம் தேதியும் நடக்கிறது. அக்டோபர் 1ம் தேதி காலை சக்கர ஸ்நான நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறவுள்ளது.