Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி இணையாக ஒரு கோயில்; ’ராசி’ ... திருப்புல்லாணி, உத்தரகோசமங்கையில் அம்பு விடுதல் நிகழ்ச்சி திருப்புல்லாணி, உத்தரகோசமங்கையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
1,000 ஆண்டுகள் பழமையான மன்னீஸ்வரர் கோயில் திருப்பணி
எழுத்தின் அளவு:
1,000 ஆண்டுகள் பழமையான மன்னீஸ்வரர் கோயில் திருப்பணி

பதிவு செய்த நாள்

30 செப்
2017
11:09

அன்னுார், ஆயிரம் ஆண்டுகள் பழமையான, அன்னுார் மன்னீஸ்வரர் கோயிலில், 1.5 கோடி ரூபாயில், திருப்பணி நடக்கிறது; டிச., 5ல், கும்பாபிஷேகம் நடக்கிறது. கோவை மாவட்டம், அன்னுாரில், மன்னீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், இறைவன் மேற்கு நோக்கி வீற்றிருப்பதால், ’மேற்றலை தஞ்சாவூர்’ என்றழைக்கப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவில், பல மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட பெருமையும், ஞானிகளால் வழிபடப்பட்ட பிரசித்தியும் பெற்றது. இங்கு ஒவ்வொரு ஆண்டும், மார்கழி மாதம், தேரோட்டம் நடக்கிறது.

இங்கு நடக்கும், சிவராத்திரி விழாவில் பல ஆயிரம் பக்தர்கள், பங்கேற்கின்றனர். இங்கு நடக்கும், பிரதோஷ வழிபாடு, சிறப்பு பெற்றது. தட்சிணாமூர்த்தி சன்னதியில், எப்போதும் பக்தர்கள் குவிந்திருப்பர். பிரசித்தி பெற்ற இக்கோவில் கும்பாபிஷேகம், 2004ல், நடந்தது. இதையடுத்து, திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்ய, முடிவு செய்யப்பட்டது. கோவிலில் வளாகத்தில், 70 அடி நீளம், 50 அடி அகலம், 16 அடி உயரத்தில், வசந்த மண்டபம் கட்டப்படுகிறது. மேலும், மன்னீஸ்வரர் சன்னதி முன், 30 அடிக்கு, 16 அடி மண்டபமும், அருந்தவச் செல்வி அம்மன் சன்னதி முன், 16க்கு 30 அடி, மண்டபமும் கட்டப்படுகிறது. கன்னி மூல கணபதி சன்னதியில், புதிதாக விமானம் அமைக்கப்படுகிறது. முருகன், பள்ளியறை, அம்மன் சன்னதிகளுக்கு மேல் உள்ள விமானங்களில், பழைய சுதைகள் அகற்றப்பட்டு, புதிதாக சுதைகள் அமைக்கப்படுகின்றன. கோவில் முழுவதும், வர்ணம் பூசப்பட உள்ளது. இந்த திருப்பணிகள் 1.50 கோடி ரூபாய் செலவில் நடக்கிறது. டிச., 5ல் கும்பாபிஷேகம் செய்ய, திட்டமிட்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் பவுர்ணமி யொட்டி  அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆறு மணி நேரமாக ... மேலும்
 
temple news
சென்னை; பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், மூலவருக்கு நாளை தைலக்காப்பு செய்யப்படுகிறது. இதையடுத்து, ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு, கண்ணுகோட்டு பகவதி அம்மன் கோவில் ஆறாட்டு மகோத்சவத்திற்க்கு கொடியேறியது.கேரள ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா உச்ச ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், திருமங்கை ஆழ்வார் திருநட்சத்திர வைபவம் நடந்தது.கோவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar