பதிவு செய்த நாள்
30
செப்
2017
02:09
திருத்தணி: திருத்தணி முருகன் கோவில் உண்டியலில், 13 நாட்களில் பக்தர்கள், 41.09 லட்சம் ரூபாய் ரொக்கம், 250 கிராம் தங்கம் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தி உள்ளனர். திருத்தணி முருகன் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவர்கள் காணிக்கையாக, பணம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை, மலைக்கோவில் உண்டியல்களில் செலுத்துகின்றனர். அந்த வகையில், 13 நாட்களில், உண்டியலில் செலுத்திய பக்தர்களின் காணிக்கை, கோவில் தக்கார் ஜெய்சங்கர் முன்னிலையில், நேற்று முன்தினம் உண்டியல்கள் திறக்கப்பட்டு, எண்ணப்பட்டன.இதில், 41.09 லட்சம் ரூபாய், 250 கிராம் தங்கம் மற்றும் 2,014 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தன.