Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருத்தணி கோவிலில் ரூ.41 லட்சம் ... குலசையில் இன்று சூரசம்ஹாரம்: லட்சம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கும்ளாபுரம் கவுரம்மா கோவில் திருவிழா பல்லக்கு ஊர்வலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 செப்
2017
02:09

ஓசூர்: தளி அருகே நடந்த கவுரம்மா கோவில் திருவிழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று, விநாயகர், கவுரம்மா பல்லக்கை சுமந்து சென்று, கும்ளாபுரம் ஏரியில் கரைத்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா, தளி அடுத்த கும்ளாபுரம் கிராமத்தில் உள்ள கவுரம்மா கோவிலில், ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது, விநாயகர் மற்றும் கவுரம்மா சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஒரு மாதம் சிறப்பு பூஜைகள் செய்து ஏரியில் கரைப்பது வழக்கம். கடந்த மாதம், 25ல் கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தியின் போது, கும்ளாபுரம் கிராமத்தில் உள்ள கவுரம்மா கோவிலில், விநாயகர் மற்றும் கவுரம்மா சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தினமும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. 27ல், அக்னி குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும், நேற்று முன்தினம் காலை, அம்மனுக்கு சிறப்பு அபி?ஷக அலங்காரமும் செய்யப்பட்டது. பின்னர் மாலை, 4:00 மணிக்கு, விநாயகர் மற்றும் கவுரம்மாவிற்கு தனித்தனியாக பல்லக்கு தயார் செய்து, அதில் விநாயகர் மற்றும் கவுரம்மா சிலைகளை வைத்து, 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் பல்லக்கை சுமந்து ஊர்வலமாக சென்றனர். அப்போது சிவானந்த சிவாச்சாரியார் மடாதிபதி ஆசிரமத்தில், சுவாமிகளுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. அதைத்தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக பல்லக்கை சுமந்து சென்ற பக்தர்கள், கும்ளாபுரம் ஏரியில் விநாயகர், கவுரம்மா சிலைகளை கரைத்தனர். இதில், தளி, தேன்கனிக்கோட்டை, பேலாளம், ஆச்சுபாலம், கோபனப்பள்ளி மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து, 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்கள் மனம் குளிர்வித்த கள்ளழகர், கண்டாங்கி பட்டு உடுத்தி, ... மேலும்
 
temple news
கோவை; கோவை பீளமேடு அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இக்கோயிலில் ஆஞ்சநேயரது ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் தாயார் பூச்சாற்று உற்சவம், வெளிக்கோடை , இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி; காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் உண்டியலில் பக்தர்கள் ரூ. 71 லட்சத்தை காணிக்கையாக செலுத்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar