Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news மீனாட்சி அம்மன் கோயில் ... திருவாடானை கோயிலில் சிதைந்த மூலிகை ஓவியங்கள் திருவாடானை கோயிலில் சிதைந்த மூலிகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காந்தி மண்டபத்தில் சூரிய ஒளி:ஏராளமானோர் அஞ்சலி
எழுத்தின் அளவு:
காந்தி மண்டபத்தில் சூரிய ஒளி:ஏராளமானோர் அஞ்சலி

பதிவு செய்த நாள்

03 அக்
2017
10:10

நாகர்கோவில்: காந்தி ஜெயந்தி நாளான நேற்று கன்னியாகுமரி காந்தி மண்டப அஸ்தி பீடத்தில் அபூர்வ சூரிய ஒளி விழுந்தது.காந்தியடிகள் இறந்த பின்னர் அவரது அஸ்தி முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் கரைக்கப்பட்டது. அதற்கு முன்னர் அவரது அஸ்தி வைக்கப்பட்ட இடத்தில் ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர். இதை தொடர்ந்து அந்த இடத்தில்காந்தியடிகளின் நினைவாகஅவரது வயதை குறிக்கும் வகையில்79 அடி உயரத்தில் மண்டபம் கட்டப்பட்டது. அவரது பிறந்த நாளான அக்., இரண்டாம் தேதி அவரது அஸ்திபீடத்தில் சூரிய ஒளி விழும் வகையில் மண்டபம் வடிவமைக்கப்பட்டது.நேற்று இந்த அபூர்வ சூரிய ஒளி விழும் நிகழ்ச்சி நடைபெற்றது. 11:55 மணிக்கு கட்டடத்தின் உள்ளே விழுந்த சூரிய ஒளி சிறிது சிறிதாக நகர்ந்து 12:00 மணிக்கு அஸ்திபீடத்தில் விழுந்தது. அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் ரகுபதிராகவராஜாராம் என்ற பாடலை பாடி அவருக்கு அஞ்சலி செலுத்தினர். மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் சஜ்ஜன்சிங்சவான், விஜயகுமார் எம்.பி.,உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பெண்கள் ராட்டையில் நுால் நுாற்றனர். இந்த நிகழ்ச்சியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar