பதிவு செய்த நாள்
03
அக்
2017
12:10
பெங்களூரு; கர்நாடகாவில், மொகரம் அனுசரிப்பு நாளில், நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக, வாழை இலையில் சுருட்டப்பட்ட, 18 மாத ஆண் குழந்தை, நெருப்பு படுக்கையில் கிடத்தப்பட்டது.கர்நாடகாவில், காங்கிரசைச் சேர்ந்த, சித்தராமையா முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தின், தார்வாட் மாவட்டத்தில், நேற்று முன்தினம், மொகரம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக, அங்குள்ள ஒரு தர்காவில், நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.இரு ஆண்டுகளுக்கு முன், தங்களுக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என வேண்டி, ஆண் குழந்தை பிறந்ததால், நேர்த்திக்கடன் செலுத்த, தர்காவுக்கு, ஒரு தம்பதி வந்திருந்தனர். தங்களின், 18 மாத ஆண் குழந்தையை, வாழை இலையில் சுருட்டி, தர்காவில் மூட்டப்பட்டிருந்த, நெருப்பு படுக்கையில் கிடத்தினர். சூடு தாங்காமல், குழந்தை தவித்தது. சிறிது நேரத்தில், அக்குழந்தை, நெருப்பு படுக்கையிலிருந்து எடுக்கப்பட்டது. இந்த காட்சிகள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. ’இது போன்ற அபாயகரமான செயல்களில் ஈடுபட வேண்டாம்’ என, அந்த குழந்தையின் பெற்றோருக்கு, ’கவுன்சலிங்’ அளிக்க, குழந்தைகள் உரிமை ஆர்வலர்கள் திட்டமிட்டு உள்ளனர்.