Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புத்து மாரியம்மன் கோவிலில் சக்ரமகா ... நெல்லையில் விட்டல்தாஸ் மகராஜின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெல்லையில் ராகவேந்திரரின் பரமகுரு விபுதேந்திரர் ஆராதனை மஹோத்ஸவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 டிச
2011
11:12

திருநெல்வேலி : நெல்லை தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள ராகவேந்திரரின் பரமகுருவான விபுதேந்திர தீர்த்தர் பிருந்தாவனத்தில் ஆராதனை மஹோத்ஸவம் நடந்தது. மத்வாச்சாரியார் வழியில் ஸ்ரீ பத்மநாப தீர்த்தர், ஸ்ரீ ஜய தீர்த்தர் வழிவந்தவர் ஸ்ரீ விபுதேந்திர தீர்த்த சுவாமிகள். இவர் கடந்த 1435ம் ஆண்டு முதல் 1490ம் ஆண்டு வரை நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, ஸ்ரீ மத்வரின் சித்தாந்தங்களை பரப்பி மக்களுக்கு நல்வழி போதித்துவந்தவர். இவரின் ஜீவ சமாதி நெல்லை சி.என்.கிராமம் தாமிபரணி நதிக்கரையில் அமைந்துள்ளது. விபுதேந்திர தீர்த்தரின் ஆராதனை மஹோத்ஸவம் மார்கழி வளர்பிறை தசமி திதியான நேற்று ராகவேந்திரா மந்திராலயா மடத்தின் சார்பில் நடந்தது. காலையில் சுப்ரபாதம் பூஜை, மகா பஞ்சாமிர்த அபிஷேகம், ஞானயக்ஞம் மற்றும் அர்ச்சனை, சிறப்பு பூஜைகள் நடந்தன. பூஜைகளை வித்வான் ஹாவேரி வேதவியாச்சர், ஆனந்த் தீர்த்தச்சாரிய பஞ்சமுகி மற்றும் மந்திரலாயம் மடம் வித்வான்கள் நடத்தினர். ஏற்பாடுகளை சென்னை மந்திராலயம் மடம் மேலாளர் வேணுகோபாலச்சாரியார், சந்தானகிருஷ்ணன் செய்திருந்தனர். இதில் பாலாஜி, சி.என்.கிராமம் இசக்கிப்பாண்டி, ஐ.ஓ.பி., கோபால் மற்றும் சென்னை ராகவேந்திரா மகளிர் குழு, நெல்லை தாமிரபரணி பஜனை மண்டலி, ராகவேந்திரா டிரஸ்ட் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சுவாமிகள் வருகை: விபுதேந்திர தீர்த்தர் சுவாமிகள் ஆராதனை விழா 4ம் தேதி துவங்கி 8ம் தேதி வரை நெல்லை சி.என்.கிராமம் தாமிரபரணி நதிக்கரையில் நடக்கிறது. இதில் மத்வாச்சாரிய மூல மகா சமஸ்தானம் தற்போதைய பீடாதிபதி ஸ்ரீ சுய தீந்திர தீர்த்தர் சுவாமிகள் வரும் 8ம் தேதி நெல்லை வருகிறார். குறுக்குத்துறையில் அமையவுள்ள ராகவேந்திரர் மிருத்திகா பிருந்தாவனத்திற்கு சுவாமிகள் பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டுகிறார். மூல ராமர் பூஜை மற்றும் சிறப்பு பூஜைகளை சுவாமிகள் நடத்துகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கரூர்; கரூர் தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை முத்தாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. தருமபுரம் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் இன்று 28ம் தேதி கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
போத்தனூர்: மதுக்கரை மரப்பாலம் பகுதியில் தர்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. தைப்பூசம் துவக்கம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் தை மாத கார்த்திகை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar