சக்தி பீடங்களில் காமகோடி பீடமாக விளங்குவது காஞ்சிபுரம். இங்கு காமாட்சியை பிரதிஷ்டை செய்தவர் வேத வியாசர். தங்க விமானத்தின் கீழ் அமர்ந்த கோலத்தில் காமாட்சி அருள்பாலிக்கிறாள். அம்மனுக்கு முன்புறம் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கரம் உள்ளது. இங்கு தான் ஆதிசங்கரர் ஆனந்த லஹரி என்னும் ஸ்தோத்திரத்தை பாடினார்.