பதிவு செய்த நாள்
04
அக்
2017
12:10
ஆத்தூர்: ஆத்தூரில் உள்ள சிவன் கோவில்களில், பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது. பிரதோஷத்தையொட்டி, ஆத்தூர், கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவிலில், நேற்று, மூலவர் காயநிர்மலேஸ்வரர், நந்தி சிலைகளுக்கு, மஞ்சள், சந்தனம், தேன், பால் உள்ளிட்ட அபிஷேகம் நடந்தது. பின், காயநிர்மலேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி அம்மன், நந்தி சுவாமிகள், வெள்ளி கவசம், புஷ்ப அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதேபோல், ஆத்தூர் கைலாசநாதர், வீரகனூர் கங்காசவுந்தரேஸ்வரர், பேளூர் தான்தோன்றீஸ்வரர், ஓமலூர் காசி விஸ்வநாதர் உள்ளிட்ட கோவில்களில் நடந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.