கன்னிவாடி, வெல்லம்பட்டி மணி சித்தர் பீடத்தில், ஜோதியில் கலந்த நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக, தேவார பாராயணத்துடன் துவங்கி, திருவாசக முற்றோதுதல் நடந்தது. சிறப்பு மலர் அலங்காரத்துடன், மகா தீபாராதனை நடந்தது. ஆன்மிக சொற்பொழிவு, அன்னதானம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.