பதிவு செய்த நாள்
09
அக்
2017
12:10
இடைப்பாடி: கிருஷ்ண பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. கொங்கணாபுரம் அருகே, ரெட்டிப்பட்டியில் உள்ள கிருஷ்ண பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத உற்சவம், கடந்த மாதம், 29ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, ஒரு வாரமாக, ரெட்டிப்பட்டி, நாச்சூர், குரும்பப்பட்டி, காவடிகாரனூர், வெண்டனூர், மாலக்கட்டி வலவு ஆகிய பகுதிகளில் எருது உற்சவம் நடந்தது. ஊர், ஊராக வலம் வந்த எருதுகள், நேற்று, கோவிலை அடைந்தது. ரெட்டிப்பட்டி மாரியம்மன் கோவிலில் இருந்து தொடங்கிய தேரோட்டம், காவடிக்காரனூரில் இருந்து வந்த எருதுகள் சேர்ந்த தேர், பெருமாள் கோவிலுக்கு, நேற்று காலை திரும்பியது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.