செஞ்சி: செஞ்சியில் மதுரகவி ஆழ்வார் சபை மாத மாநாடு நடந்தது. செஞ்சி வட்ட மதுரகவி ஆழ்வார் திருநட்சத்திர பரிபாலன சபையின் மாத மாநாடு ஏ.என்.ஏ., மினி ஹாலில் நடந்தது. சபை பொருளாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார். சபை துணை தலைவர் டாக்டர் ரமேஷ்பாபு முன்னிலை வகித்தார். உறுப்பினர் தேவநாதன் திருமால் துதிபாடினார். ராஜேந்திரன் வரவேற்றார். ஸ்ரீராமாயண சாரம் தலைப்பில் வந்தவாசி சீனுவாசனும், கண்ணபிரான் நீராட்டம் தலைப்பில் வளையசெட்டிகுளம் ரகுபதியும் சிறப்புரை நிகழ்த்தினர். சபை உறுப்பினர் தேவநாதன், முருகன், சிவகங்கை மற்றும் பாகவதர்கள், ஆண்டாள் கோஷ்டியினர் கலந்து கொண்டனர். சபை உறுப்பினர் நாராயணசாமி நன்றி கூறினார்.