Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாடலாத்ரி கோவிலில் பாதுகாப்பு ... வேண்டுதல் நிறைவேறும் பாதகோவில்: தாமரைப்பாடியில் புராதன வழிபாடு வேண்டுதல் நிறைவேறும் பாதகோவில்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உச்சி குளிர வைக்கும் உச்சிமாகாளியம்மன்
எழுத்தின் அளவு:
உச்சி குளிர வைக்கும் உச்சிமாகாளியம்மன்

பதிவு செய்த நாள்

10 அக்
2017
11:10

பொள்ளாச்சி அடுத்த கோட்டூரில் வடக்கு திசை நோக்கி அமைந்துள்ளது உச்சிமாகாளியம்மன் கோவில். கோவிலில், மூலவரான உச்சிமாகாளியம்மன் வடக்கு திசையில் மயானம் நோக்கி இருப்பது சிறப்பாக கருதப்படுகிறது. அம்மன் நான்கு கைகளில், உடுக்கை, அங்குசம், வேல் மற்றும் குங்குமத்துடன் அருள்பாலிக்கிறார்.1976க்கு முன் அம்மன் முகத்தோற்றம் இல்லாமல் சுயம்பு வடிவாக அருள்பாலித்தார். கோவிலில் சுயம்புக்கு பின் முகத்தோற்றத்துடன் கூடிய உச்சிமாகாளியம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. உற்சவர்களாக மாகாளியம்மன், வள்ளி தெய்வானையுடன் முருகன் எழுந்தளியுள்ளார். கோவில் வளாகத்தில், வீரனுடன் கூடிய குதிரை சிலை அமைக்கப்பட்டுள்ளது.

அந்த சிலை, 1884ல் அமைக்கப்பட்டதாக கல்வெட்டு பதிக்கப்பட்டுள்ளதால், 250 ஆண்டுகள் பழமையான கோவில் என, வாய்மொழி வரலாறு சொல்கின்றனர் கோவில் அரங்காவலர்கள். கோவில் வளாகத்தில் சிவன், முருகன், நவநாயகர்கள், காலபைரவர் மற்றும் சண்டிகேஷ்வரர் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. ஆண்டுதோறும் பங்குனி மாதம் அம்மனுக்கு திருவிழா நடத்தப்படும். கோவிலுக்கு, 25 அடி தேர், 20 அடிக்கு சிவன் தேர்கள் உள்ளன. பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.அம்மனுக்கு காலை, 5:30 மணிக்கு முதல் பூஜையும், 7:00 மணிக்கு அலங்கார தீபாராதனை, மதியம், 12:00 மணிக்கு உச்சிகால பூஜையும், 4:30 மணிக்கு நடை திறப்பு, இரவு, 7:30 மணிக்கு ராகால பூஜை நடக்கிறது. அம்மனுக்கு நவராத்திரி அன்று, மஞ்சள், விபூதி மற்றும் சந்தனத்தில் அலங்காரம் செய்யப்படுகிறது. கோவிலில், 2007ல் கும்பாபிஷேகம் நடந்தது. கோவிலுக்கு வெள்ளிக்கிழமை மட்டுமின்றி வைகாசி விசாகம், நவராத்திரி, சூரசம்ஹாரம், மார்கழி மற்றும் கார்த்திகை மாதம் வழிபாடுகள் சிறப்பு சேர்க்கிறது.திருமண தடை நீங்க வேண்டி அம்மனை வழிபட்டவர்கள், வரன் அமைந்ததும் கோவிலில் திருமணம் நடத்துவது தொன்றுதொட்டு கடைபிடிக்கப்படுகிறது. குழந்தை பாக்கியம், தொழில் அபிவிருத்திக்கு பக்தர்கள் மனமுருகி அம்மனை வழிபட்டு, வேண்டுதல் நிறைவேறியதும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு  சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி 2ம் சனிக்கிழமை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; ஆடி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச  வரத ஸ்ரீ ஆஞ்சநேயர் ... மேலும்
 
temple news
தஞ்சை; ராஜராஜசோழன் மறைவுக்கு பின், அவரது மகன் ராஜேந்திர சோழன், 1014ம் ஆண்டு அரியணை ஏறினார். படை பலத்தின் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூரத்திருவிழா 9ம் நாளான இன்று காலை ... மேலும்
 
temple news
டேராடூன்:  உத்தரகண்ட் மாநிலம் கௌரிகுண்ட் அருகே உள்ள கேதார்நாத் தாம் பகுதிக்கு மலையேற்றப் பாதை நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar