Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தெரசன்னை திருவிழா கோலாகலம்: ... சின்ன திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா சின்ன திருப்பதி வெங்கடேச பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரங்கசாமி மலை ரங்கநாதர் கோவிலில் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
ரங்கசாமி மலை ரங்கநாதர் கோவிலில் பக்தர்கள்

பதிவு செய்த நாள்

10 அக்
2017
12:10

கோத்தகிரி: கோத்தகிரி ரங்கசாமி மலையில் அமைந்துள்ள ரங்கநாதர் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு, நடந்த சிறப்பு பூஜையில், நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் சுவாமி தரிசனம் செய்தனர். கீழ்கோத்தகிரி வனச்சரகத்திற்கு உட்பட்ட, சோலுார்மட்டம் பகுதியில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் ரங்கசாமி மலையில், பழங்குடி மக்களால் பூஜிக்கப்படும் ரங்கநாதர் கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும், புரட்டாசி சனிக்கிழமை நாட்களில், இந்த கோவிலில் ஐயனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.

இப்பூஜையில், நீலகிரி மாவட்டம் உட்பட, மேட்டுப்பாளையம், காரமடை, ஆலங்கொம்பு, பவானிசாகார் மற்றும் சத்தியமங்கலம் உட்பட சமவெளி பகுதிகளில் இருந்து அதிகளவில் பக்தர்கள் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். கடந்த இரு ஆண்டுகளாக, பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மூன்றாவது சனிக்கிழமையில் நடந்த சிறப்பு பூஜையில், இதுவரை இல்லாத வகையில், நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வனப்பகுதியில், 4 கி.மீ., தொலைவில் மலைப்பகுதிக்குள் நடைப்பயணமாக சென்று சுவாமி தரிசனம் செய்தனர். வனத்துறை சார்பில், கரிக்கையூர் கிராம வனக்குழு மூலம், பக்தர்களிடம் இருந்து, ஐந்து ரூபாய் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கீழ்கோத்தகிரி ரேஞ்சர் செல்வம் கூறியதாவது: கிராம வனக்குழு மூலம், நுழைவு கட்டணம் வசூலிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மாவட்ட வன அலுவலரின் ஒப்புதலுடன், ஐந்து ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு, முறையாக ரசீது வழங்கப்படுகிறது. மேலும், இந்த தொகை, ரங்கசாமி கோவிலுக்கு வரும் பக்தர்களால், வீசப்படும் குப்பை மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் பணிக்கும், கரிக்கையூர் பழங்குடியினர் திட்டம் சாரா வளர்ச்சிப் பணிகளுக்கும் மாவட்ட வன அலுவலரின் அறிவுரைப்படி பயன்படுத்தப்பட உள்ளது. புரட்டாசி மாதம் மூன்று சனிக்கிழமைகளில் மட்டும், 25 ஆயிரத்து, 600 ரூபாய் நுழைவுக்கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. வரும், 14ம் தேதி கடைசி சனிக்கிழமையில், பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும் என நம்பப்படுவதால், வனப்பகுதியில் கூடுதலாக போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். இவ்வாறு செல்வம் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருப்பதி ஸ்ரீ வாரி கோவிலில் சாஸ்திர முறைப்படி இன்று வருடாந்திர சிறப்பு பூஜை ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவின் பிரசித்திபெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மூலவருக்கு, 21.5 சவரன் தங்க கிரீடம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; முருகனின் அறுபடை வீடுகளில், நான்காம் படை வீடான சுவாமிமலையில், தைப்பூச திருவிழா ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், பூபதி திருநாள் எனப்படும் தை தேர் திருவிழா, கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
பிரயாக்ராஜ்: வசந்த பஞ்சமித் திருநாளான இன்று, பிரயாக்ராஜ், தீர்த்தராஜ பிரயாகையில் உள்ள திரிவேணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar