Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தெரசன்னை திருவிழா கோலாகலம்: ... சின்ன திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா சின்ன திருப்பதி வெங்கடேச பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரங்கசாமி மலை ரங்கநாதர் கோவிலில் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
ரங்கசாமி மலை ரங்கநாதர் கோவிலில் பக்தர்கள்

பதிவு செய்த நாள்

10 அக்
2017
12:10

கோத்தகிரி: கோத்தகிரி ரங்கசாமி மலையில் அமைந்துள்ள ரங்கநாதர் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு, நடந்த சிறப்பு பூஜையில், நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் சுவாமி தரிசனம் செய்தனர். கீழ்கோத்தகிரி வனச்சரகத்திற்கு உட்பட்ட, சோலுார்மட்டம் பகுதியில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் ரங்கசாமி மலையில், பழங்குடி மக்களால் பூஜிக்கப்படும் ரங்கநாதர் கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும், புரட்டாசி சனிக்கிழமை நாட்களில், இந்த கோவிலில் ஐயனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.

இப்பூஜையில், நீலகிரி மாவட்டம் உட்பட, மேட்டுப்பாளையம், காரமடை, ஆலங்கொம்பு, பவானிசாகார் மற்றும் சத்தியமங்கலம் உட்பட சமவெளி பகுதிகளில் இருந்து அதிகளவில் பக்தர்கள் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். கடந்த இரு ஆண்டுகளாக, பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மூன்றாவது சனிக்கிழமையில் நடந்த சிறப்பு பூஜையில், இதுவரை இல்லாத வகையில், நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வனப்பகுதியில், 4 கி.மீ., தொலைவில் மலைப்பகுதிக்குள் நடைப்பயணமாக சென்று சுவாமி தரிசனம் செய்தனர். வனத்துறை சார்பில், கரிக்கையூர் கிராம வனக்குழு மூலம், பக்தர்களிடம் இருந்து, ஐந்து ரூபாய் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கீழ்கோத்தகிரி ரேஞ்சர் செல்வம் கூறியதாவது: கிராம வனக்குழு மூலம், நுழைவு கட்டணம் வசூலிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மாவட்ட வன அலுவலரின் ஒப்புதலுடன், ஐந்து ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு, முறையாக ரசீது வழங்கப்படுகிறது. மேலும், இந்த தொகை, ரங்கசாமி கோவிலுக்கு வரும் பக்தர்களால், வீசப்படும் குப்பை மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் பணிக்கும், கரிக்கையூர் பழங்குடியினர் திட்டம் சாரா வளர்ச்சிப் பணிகளுக்கும் மாவட்ட வன அலுவலரின் அறிவுரைப்படி பயன்படுத்தப்பட உள்ளது. புரட்டாசி மாதம் மூன்று சனிக்கிழமைகளில் மட்டும், 25 ஆயிரத்து, 600 ரூபாய் நுழைவுக்கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. வரும், 14ம் தேதி கடைசி சனிக்கிழமையில், பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும் என நம்பப்படுவதால், வனப்பகுதியில் கூடுதலாக போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். இவ்வாறு செல்வம் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் இரவு 12 மணி வரை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஆடி மாத அமாவாசை ... மேலும்
 
temple news
இலங்கை; இலங்கை. யாழ்ப்பாணம் காங்கேசந்துறை வீதியில், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் உள்ளது. யாழ்ப்பாண ... மேலும்
 
temple news
ஆடி மாத வெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபட்டால் வீட்டில் சுப காரியங்கள் தடையின்றி நடைபெறும். ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடி குண்டம் திருவிழாவை முன்னிட்டு, ... மேலும்
 
temple news
கோவை; அம்மன் கோவில்களில் ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமையை  முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அருள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar