Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற ... தீபாவளி எப்போது கொண்டாடப்பட்டது? தீபாவளி எப்போது கொண்டாடப்பட்டது?
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தீபாவளியன்று சுவையான உணவு உண்பது ஏன்?
எழுத்தின் அளவு:
தீபாவளியன்று சுவையான உணவு உண்பது ஏன்?

பதிவு செய்த நாள்

16 அக்
2017
05:10

தீபாவளியன்று சுவையான உணவு வகைகளை நாம் சாப்பிட்டு மகிழ்கிறோம். இதற்குக் கூட காரணம் இருக்கிறது. நமக்கு உணவு கிடைக்க காரணமாக இருப்பவள் அன்னை அன்னபூரணி. இவள் காசி விஸ்வநாதர் கோயிலில் குடிகொண்டிருக்கிறாள். காசியில் கங்கா ஸ்நானமும், விஸ்வநாதரின் தரிசனமும் எவ்வளவு முக்கியமோ,அதே அளவுக்கு அன்னபூரணி தரிசனமும் சிறப்புமிக்கது. ஆதிசங்கரர் காசி சென்று அன்னபூரணி மீது ஸ்தோத்திரம் பாடினார். கருணையின் பற்றுக்கோடான தாயே!அன்னபூரணியே!பிச்சைபோடு! எனக்கு உலக அன்னையான பார்வதியே அம்மா! பரமேஸ்வரனே அப்பா! உ லகமே வீடு!உலக உயிர்கள் அனைத்தும் சொந்தங்கள்!என்று குறிப்பிட்டுள்ளார்.நாம் ஒவ்வொருவரும் நலமாக உணவு பெற்று வாழவேண்டும் என்பதே சங்கரரின் நோக்கம் என்பதை இந்த ஸ்தோத்திரம் எடுத்துக் காட்டுகிறது.

அந்த அம்பிகையிடம் அன்னத்தை கேட்டுப் பெறுவதுடன், இன்னொன்றையும் அவர் வேண்டுகிறார். வெறும் உணவைத் தின்று உடலை வளர்ப்பதால் பயனில்லை. அவளின் அருளைப் பெற்று ஞானம் வளர்ப்பதே பிறவிப்பயன்.அதனால்,சங்கரர் அன்னபூரணியிடம் இறுதியாக,அன்னபூர்ண ஸதாபூர்ணே சங்கரப்ராண வல்லபே! ஞான வைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷாம் தேஹி சபார்வதி! என்று அன்னத்தோடு,ஞானவை ராக்கியத்தையும் பிச்சையிடும்படி வேண்டுகிறார். காசியில் அன்னபூரணி தீபாவளியன்று லட்டு சப்பரத்தில் பவனி வருவாள். இது நமக்கெல்லாம் இனிமையான வாழ்வு கிடைக்கவேண்டுமென அவள் ஆசைப்படுவதைக் குறிக்கிறது.இதனால் தான் நாம் ருசியான பதார்த்தங்களைச் சாப்பிடுகிறோம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் நேற்று, ஆடி மாதம் முதல் கிருத்திகை விழா என்பதால், அதிகாலை 5:00 ... மேலும்
 
temple news
 திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
 பழநி; பழநி கோயிலில் ஆடி மாத கார்த்திகை, மற்றும் விடுமுறை நாளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பழநி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் சிறப்பு ... மேலும்
 
temple news
திண்டிவனம்; திண்டிவனம் கிடங்கல் பகுதியில் ஆடிகிருத்திகையை முன்னிட்டு, பக்தர்களுக்கு மிளகாய் பொடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar