அய்யாவாடி மகா பிரத்தியங்கிரா தேவி கோயிலில் சிறப்பு யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20அக் 2017 12:10
மயிலாடுதுறை: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த அய்யாவாடி கிராமத்தில் ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி கோயில் உள்ளது. எட்டு திசையிலும் மயானத்தால் சூழப்பட்ட இக்கோயிலில் ரா வணன் மகன் மேகநாதன் மற்றும் பஞ்ச பாண்டவர்களும் அம்பாளை பூஜித்து வரங்களை பெற்றுள்ளனர். சிறப்பு வாய்ந்த இந்த கோயிலில் அமாவாசை தோறும் மிளகாய் வற்றல் கொ ண்டு நடத்தப்படும் நிகும்பலா யாகம் மிகவும் சக்தி வாந்தது. ஆனால் ஆண்டுக்கு ஒருமுறை தீபாவளியையொட்டி வரும் அமாவாசை அன்று மட்டும் மிளகாய் வற்றலுக்கு பதிலாக இ னிப்புகளை குண்டத்தில் இட்டு யாகம் நடத்தப்படும். யாகத்தில் கலந்து கொண்டு அம்பாளை சரனடைந்தால் சகல நன்மைகளும் கிடைக்கும். புரட்டாசி அம்மாவாசை மற்றும் தீபாவ ளிக்கு அடுத்த நாளான நேற்று காலை அம்பாளை கோயில் மண்டபத்தில் எழுந்தருள செய்து பூஜைகள் நடத்தப்பட்டன. மதியம் தண்டபாணி குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியா ர்கள் வேத மந்திரங்கள் ஓதி, யாக குண்டத்தில் இனிப்புகளை சேர்த்தனர். தொடர்ந்து ஸ்ரீ மகாபிரத்தியங்கிரா தேவிக்கு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்பாளை மனமுருகப் பிரார்த்தனை செய்தனர். யாகத்திற்கான ஏற்பாடுகளை சங்கர் குருக்கள் செய்திருந்தார். கும்பகோணத்தில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.