பதிவு செய்த நாள்
21
அக்
2017
11:10
பழநி: கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு, பழநி மலைக்கோயிலில் சுவாமிகளுக்கு காப்புக்கட்டுதல் நடந்தது. பழநி முருகன்கோயிலில் அக்.,20 முதல் 26 வரை கந்த சஷ்டிவிழா நடக்கிறது. முதல்நாளான நேற்று மலைக்கோயிலில் உச்சிக்கால பூஜையில் மூலவர், உற்சவர் சின்னக்குமாரசுவாமி, சண்முகர், துவாரபாலகர்கள், மயில், நவவீரர்களுக்கு காப்புக்கட்டுதல் நடந்தது. அதேநேரத்தில் பக்தர்களும் தங்கள் கையில் காப்புக்கட்டி சஷ்டி விரதத்தை துவங்கியுள்ளனர். இதேபோல திருஆவினன்குடி கோயில், பெரியநாயகியம்மன் கோயில்களிலும் முருகப்பெருமானை வழிபட்டு ஏராளமான பக்தர்கள் கையில் காப்புக்கட்டி சஷ்டி விரதத்தை துவக்கினர். இரவு 7:15 மணிக்கு தங்கரதப் புறப்பாட்டை காண ஏராளமான பக்தர்கள் திரண்டனர். கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான சூரசம்ஹாரம் அக்.,25ம் தேதியும், திருக்கல்யாணம் அக்.26ம் தேதியும் நடக்கிறது. ஏற்பாடுகளை இணைஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் மேனகா செய்கின்றனர்.