Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி கோயிலில் கந்தசஷ்டி விழா ... திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வடக்கு மண்டல ஐ.ஜி., ஆய்வு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேனி கோயில்களில் கந்தசஷ்டி விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
தேனி கோயில்களில் கந்தசஷ்டி விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

21 அக்
2017
11:10

தேனி: மாவட்டத்தின் பல்வேறு பகுதி கோயில்களில் கந்த சஷ்டி திருவிழா நேற்று துவங்கியது. முருகனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவக்கினர்.தேனி பங்களா மேடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் உள்ள வேல்முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. என்.ஆர்.டி.,நகர் கணேச கந்த பெருமாள் கோயில், பெரியகுளம் ரோட்டில் உள்ள வேல் முருகன் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவக்கினர்.
*பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

கம்பம்: கம்பம் கம்பராயப்பெருமாள் கோயில் மற்றும் வேலப்பர் கோயில்களில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் காப்பு கட்டி விரதம் துவக்கினர்.

ஆண்டிபட்டி: சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயில், ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், டி.சுப்புலாபுரம் கந்தநாதர் கோயில்களில் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது . காப்பு கட்டி விரதம் துவக்கிய பக்தர்கள் கந்த சஷ்டி கவசம் பாடினர். அக்.25ல் பருப்பு நீர் வழங்குதல், அக்., 26ல் சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாணம் நடக்கிறது.

கூடலுார்: கூடலுார் கூடல் சுந்தரவேலவர் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் , தீபாராதனை நடந்தது. சர்வ அலங்காரத்தில் சுந்தரவேலவர் அருள்பாலித்தார். பக்தர்கள் விரதம் இருக்க காப்பு கட்டினர். மகளிர் குழுவினரின் தெய்வீகக் கூட்டு வழிபாடு நடந்தது. பழநி மலை சுருளி மலை பாதயாத்திரை குழு பெண்கள் பஜனை பாடல்கள் பாடினர். அனைவருக்கும் மாவு பிரசாதம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; மார்கழி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை, உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரிய கோவில் வளாக தரையில், மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 
temple news
உடுமலை: சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவில் திருவிழா வரும் 16ம் தேதி சிறப்பு அலங்கார பூஜையுடன் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரி கலைமகள் சத்குரு தியாகராஜ சுவாமியின், 15ம் ஆண்டு ஆராதனை இசை விழா, வேதபுரீஸ்வர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar