Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சின்னாளபட்டி சஷ்டி விழாவில் ... சூரசம்ஹார விழா: ஈரோடு கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சூரனை வதம் செய்த சுப்ரமணியர்: வாணவேடிக்கையுடன் கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 அக்
2017
01:10

சேலம்: சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார விழா, வாணவேடிக்கை, பக்தர்கள் கோஷத்துடன் கோலாகலமாக நடந்தது. சேலம், அம்மாபேட்டை, செங்குந்தர் குமரகுரு சுப்ரமணியர் கோவிலில், கடந்த, 17ல் கந்தசஷ்டி விழா தொடங்கியது. நேற்று காலை, மகா கந்தசஷ்டி பாராயணம், 36 முறை பாடப்பட்டது. தொடர்ந்து, சஷ்டி சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனை, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதில், முருகன், வள்ளி தெய்வானையுடன் மணக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை, மாடவீதி வழியாக வந்த சுப்பிரமணியர், சூரனை வதம் செய்தார். இதில், ஏராளமானோர் சுவாமியை வழிபட்டனர். அதேபோல், ஜாகீர் அம்மா பாளையம், காவடி பழனியாண்டவர் கோவிலில், அதிகாலை முதல் சிறப்பு பூஜை, 108 வலம்புரி சங்காபி?ஷகம், லட்சார்ச்சனை நடந்தது. மாலை, சூரசம்ஹார லீலை நடந்தது.

* மகுடஞ்சாவடி, சுப்ரமணியர் கோவிலில், 11ம் ஆண்டு கந்தசஷ்டி சூரசம்ஹார திருவிழாவையொட்டி, நேற்று காலை, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. புஷ்ப அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதியம், 3:00 மணிக்கு, ரேக்ளா போட்டி நடந்தது. அதில், சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 10 குதிரை, 5 காளை கன்று குட்டிகள் பங்கேற்றன. மகுடஞ்சாவடியில் இருந்து கன்னந்தேரி வரை நடந்த போட்டியில், குமாரபாளையத்தை சேர்ந்த வெங்கிட், பவானியைச் சேர்ந்த சிங்காரவேல், மோவிஷா ஆகியோர், முதல் மூன்று இடங்களை பிடித்தனர். அவர்களுக்கு முறையே, 5,000, 4,000, 3,000 ரூபாய் பரிசு பெற்றனர். அதேபோல், காளை கன்று குட்டி பங்கேற்ற போட்டியில், சேலம் லோகநாதன், 3,000 ரூபாய், பாரப்பட்டி சுரேஷ், 2,000 ஆயிரம் ரூபாய் பரிசு பெற்றனர். போட்டியை, ஏராளமானோர் சாலை நெடுகிலும் கூடி ரசித்தனர்.

* ஆத்தூர் அருகே, வடசென்னிமலை பாலசுப்ரமணியர் கோவிலில், நேற்று மாலை, வாணவேடிக்கை, பக்தர்களின் அரோகரா கரகோஷத்துடன் முருகன், சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி தத்ரூபமாக செய்திருந்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். மூலவர் பாலசுப்ரமணியர், ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோல், ஆத்தூர் கோட்டை காயநிர்மலேஸ்வரர், கைலாசநாதர், வெள்ளை விநாயகர் கோவில், ஆறகளூர் காமநாதீஸ்வரர், முருகன் கோவில், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில், சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தென்காசி; ஐப்பசி விசு திருவிழாவை முன்னிட்டு திருக்குற்றாலநாதர் கோவிலில் நடராஜருக்கு பச்சை சாத்தி ... மேலும்
 
temple news
திருப்பரங்கன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவர் கரத்திலுள்ள தங்கவேலுக்கு ... மேலும்
 
temple news
ஆந்திரா;  நந்தியாலில் உள்ள ஸ்ரீசைலம் ஸ்ரீ பிரமராம்பா மல்லிகார்ஜுன சுவாமி வர்ல தேவஸ்தானத்தில் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய பெய்த கன மழையால் உத்தரகோசமங்கை ... மேலும்
 
temple news
வாடிப்பட்டி: பரவை முத்துநாயகி அம்மன் கோயில் புரட்டாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மனின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar