கேரளா சாக்குளத்துகாவு அம்மனுக்கு தேனியில் தயாரான ஆபரண பெட்டி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09பிப் 2026 11:02
தேனி; கேரள மாநிலம் சாக்குளத்துகாவு பகவதியம்மன் கோயிலுக்கு தமிழகத்தில் இருந்து நகைகள் எடுத்து செல்ல தேவாரத்தில் ஆபரண பெட்டி தயார் செய்யப்பட்டது. இப்பெட்டி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் வைத்து பூஜை செய்யப்பட்டது.
கேரள மாநிலத்தில் சாக்குளத்துகாவு பகவதியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு கேரளா மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் செல்கின்றனர். இக்கோயிலுக்கு தேவாரத்தில் ஆபரண பெட்டி தயாராகி உள்ளது. இந்த பெட்டி நேற்று முன்தினம் வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் வைத்து பூஜை செய்யப்பட்டது. ஆபரண பெட்டி குறித்து சின்னமனுார் மாரிச்சாமி, தேவாரம் சோனாஜி கூறியதாவது: சாக்குளத்துகாவு கோயிலில் தமிழகத்தில் இருந்து விழா எடுக்க சாமி உத்தரவு வழங்கி உள்ளதாக கோயில் குருக்கள் மணிகுட்டன், ராதாகிருஷ்ணன் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து தேவாரத்தில் ஆபரண பெட்டி உருவாக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் சாக்குளத்துகாவு பகவதியம்மன் சேவா சங்கம் என்ற பெயரில் பக்தர்கள் இணைந்துள்ளோம். இந்த பெட்டியை தமிழகத்தில் உள்ள பிரபல கோயில்களில் வைத்து பூஜை செய்ய உள்ளோம். சாக்குளத்துகாவில் அனுமதி பெற்று சுவாமிக்கு நகைகள் செய்து அனுப்ப உள்ளோம். ஆபரண பெட்டி கோயிலுக்கு கொண்டு செல்லும் நாளை திருவிழாவாக கொண்டாட ஏற்பாடுகள் செய்து வருகிறோம் என்றனர்.