காடுபட்டி: சோழவந்தான் தென்கரை அகிலாண்டேஸ்வரி மூலநாத சுவாமி கோயில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, சூரசம்ஹார விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதைதொடர்ந்து வள்ளி தெய்வானை, சுப்ரமணியசுவாமி திருக்கல்யாண கோலத்தில் அருள்பாலித்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் பிரதோஷ கமிட்டி செய்திருந்தது.