தேவகோட்டை: 9 டன் எடையிலான பஞ்ச உலோகத்திலான பஞ்ச முக சிவனை பக்தர்கள் தரிசித்தனர்.கர்நாடக மாநிலம் ஹவா மல்லிநாத் மகராஜ் சுவாமி ஏற்பாட்டில் உருவாக்கப்பட்ட 9 டன் பஞ்ச உலோகத்திலான பஞ்ச முகம் சிவன் ரதம் நேற்று தேவகோட்டை வந்தது. இந்த ரதத்தில் 5 உருவங்களாக சிவபெருமானும்,மார்பிள் கல்லால் உருவான நந்தியும் உள்ளது. மற்றொரு வாகனத்தில் மார்பிள் கல்லால் ஆன மூன்றடி உயரமுள்ள வேலைபாடுகளுடன் கூடிய லிங்க விக்ரகமும் உள்ளது. கடந்த 2015 ஆக. 31ல் துவங்கிய இந்த ரதயாத்திரை பல மாநிலங்கள் சென்று அனைத்து சிவஸ்தலங்கள் செல்லவேண்டும் நோக்கத்தில் 102 வது சிவஸ்தலமான ராமேஸ்வரம் வந்தது. அங்கு பக்தர்கள் தரிசனத்திற்கு பிறகு தேவகோட்டை வந்தது.