Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
30 ’சிசிடிவி’ கேமராக்கள் ... பெள்ளாதியில் விஜயநகரப் பேரரசின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தீப திருவிழா பாதுகாப்பு ஏற்பாடு குறித்து கோவில் நிர்வாகம், போலீசார் ஆலோசனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 நவ
2017
01:11

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா பாதுகாப்பு ஏற்பாடு குறித்து, போலீசார் மற்றும் கோவில் நிர்வாகம் இணைந்து, கூட்டாக ஆலோசனை நடத்தினர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், வரும், 23ல், கார்த்திகை தீப திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. பத்து நாட்கள் நடக்கும் விழாவில், டிச., 2 அதிகாலை, 4:00 மணிக்கு, பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயர மலை உச்சியில் மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளன. விழாவை காண, பல்வேறு பகுதிகளிலிருந்து, 20 லட்சம் பக்தர்கள் வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக, 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதில், கோவில் உள் வளாகம், மாட வீதி, கிரிவலப்பாதை மற்றும் மலை ஏறும் வழியில், எத்தனை போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது, கோவில் நிர்வாகம் மற்றும் போலீஸ் சார்பில் பொருத்தப்படும் ’சிசிடிவி’ கண்காணிப்பு கேமராக்களை ஒருங்கிணைத்து கண்காணிப்பது, குட்டி விமானம் மூலம் கண்காணித்தல், இந்த பணியில் ஈடுபடும் போலீசார் தங்க இட வசதி செய்து தருதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து, நேற்று கோவில் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் கோவில் இணை ஆணையர் ஜெகன்நாதன், எஸ்.பி., பொன்னி, டி.எஸ்.பி., ரவளிப்பிரியா உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கேரள மாநிலம், அச்சன்கோவில் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவில் மகோத்சவ விழாவில் இன்று சுவாமிக்கு ஆராட்டு ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஏழாம் நாளான இன்று  நம்பெருமாள் ஆண்டாள் (கிருஷ்ணன்) ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே  பஞ்ச குரு ஸ்தலங்களில் ஒன்றான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருஞ்சேரி ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே கடத்தூர் ஸ்ரீ அர்ச்சுனேஸ்வரர் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar