பதிவு செய்த நாள்
03
நவ
2017
11:11
மும்பை: மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள கோவிலில், விஸ்கி போன்ற மது வகைகள் படையலாக அளிக்கப்படுகின்றன; பின், அவை, பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றன. மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. தலைநகர் மும்பையின் புறநகர் பகுதியான, செம்பூரில் உள்ள இடுகாட்டில், பாபா பைரோன் நாத் என்ற சிவன் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில், ஒவ்வொரு ஆண்டும், கார்த்திகை ஏகாதசி தினத்தன்று, சிவனுக்கு, விஸ்கி, பிராந்தி போன்ற மது வகைகள் படையலிடப்படுகின்றன; பின், அவை, பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றன. 40 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.
மற்ற நாட்களில் பக்த ர்கள் வந்தாலும், கார்த்திகை ஏகாதசியின் போது கூட்டம் அலை மோதுகிறது. சமீபத்தில், கார்த்திகை ஏகாதசி விழா மிகச் சிறப்பாக நடந்தது.