பதிவு செய்த நாள்
03
நவ
2017
02:11
மோகனூர்: கல்லறை திருநாளான நேற்று, மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவர்கள், இறந்து போன தங்களது உறவினர்கள், மோட்சம் அடைய வேண்டும் என்பதற்காக பிரார்த்தனை செய்து வழிபட்டனர்.
உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள், நவம்பர், 2ஐ, இறந்துபோன தங்களது உறவினர்களை வழிபடும் வகையில், கல்லறை திருநாளாக அனுசரிக்கின்றனர். அன்றைய தினம், கல்லறைக்கு சென்று சுத்தம் செய்து, பூக்கள் மற்றும் மாலைகளால் அலங்கரிக்கின்றனர். தொடர்ந்து, மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து, இறந்த ஆத்மாக்கள் மோட்சம் அடைய வேண்டும் என்பதற்காக பிரார்த்தனையில் ஈடுபடுவர். இது ஆண்டுதோறும் நடந்து வருகிறது. அதன்படி, மோகனூரை சேர்ந்த கிறிஸ்தவர்கள், காட்டுப்புத்தூர் சாலையில் உள்ள ஆலய வளாக கல்லறைக்கு சென்று வழிபட்டனர். ஆர்.சி.பேட்டப்பாளையத்தை சேர்ந்த கிறிஸ்தவர்களும், கல்லறையை சுத்தம் செய்து, மலர்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏற்றி வழிபட்டனர். பங்குத்தந்தை பிரகாஷ் தலைமையில், ஏராளமானோர் பங்கேற்றனர். அதேபோல், மாவட்டம் முழுவதும், கல்லறை திருநாள் நடந்தது.