Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பலமாக உள்ளது தஞ்சை பெரிய கோயில்: ... நெல்லை கோயில்களை அறிய செயலி அறிமுகம் நெல்லை கோயில்களை அறிய செயலி அறிமுகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கல்திட்டை சொல்லும் வரலாற்று தகவல்: ஆய்வு நடத்தினால் வெளியாகும் சிறப்பு
எழுத்தின் அளவு:
கல்திட்டை சொல்லும் வரலாற்று தகவல்: ஆய்வு நடத்தினால் வெளியாகும் சிறப்பு

பதிவு செய்த நாள்

13 நவ
2017
11:11

பொள்ளாச்சி : பெரியகளந்தையின், வரலாற்றை வெளிப்படுத்தும், கல்திட்டைகளையும், கல்வெட்டுகளையும், பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர். பொள்ளாச்சி அருகேயுள்ள பெரிகளந்தை, பல நுாற்றாண்டுகளுக்கு முன், அரசர்கள் ஆண்ட பகுதியாக இருந்துள்ளது. இது பற்றிய வரலாற்று ஆவணங்கள் மறைந்தாலும், இன்றுள்ள ஆதீஸ்வரன்கோவில் கல்வெட்டுகளும், அப்பகுதியில் அரண்மனைகள் இருந்துள்ளதை உறுதிபடுத்துகின்றன.மேலும், பெரியகளந்தை சுற்றுப்பகுதியில் கோட்டை கட்டடங்களின் இடிபாடுகள், மண்ணில் புதைந்த கோவில்கள், கிடைத்த பொருள்களால், அப்பகுதி, பழங்காலத்திலேயே சிறப்பு பெற்றிருந்ததை வெளிப்படுத்துகிறது.

கிராமத்திலுள்ள, ஆதீஸ்வரன் கோவிலுக்கு மேற்கு பகுதியில், தொல்லியல் சின்னமான கல்திட்டை ஒன்று, புதருக்குள் காணப்படுகிறது. குடிசை போன்ற அமைப்பில் மூன்று பக்கமும் பட்டையான பலகை கற்களால் மூடப்பட்டுள்ளது. முன்பக்க வாயில் பகுதி மட்டும் பாதி திறந்த தோற்றத்திலும் கட்டப்பட் டுள்ளது. இக்கல்திட்டை ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என, தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கல்திட்டையின் உட்பகுதியில், புலியை கொன்ற வீரனுக்கு எடுக்கப்பட்ட நடுகல் சிற்பங்களை பிற்காலத்தில் அமைத்துள்ளனர். ஒரு சிற்பத்தில் வீரன் குதிரையுடன் இருப்பது போன்றும், மற்றொரு சிற்பத்தில் பாய்ந்து தாக்குகின்ற புலியின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், புலியோடு வீரன் போரிடும் வழக்கமான சிற்பமாக இல்லாமல், வீரனும், புலியும் தனித்தனியே காட்டப்பட்டுள்ளன.பழங்கால கல்திட்டை என்றாலும், இங்குள்ள சிற்பங்களை பல்வேறு பெயரிட்டு, சிற்பங்களுக்கு எண்ணெய் பூசி, குங்குமம் இட்டு இப்பகுதி மக்கள் வணங்குகின்றனர். இத்தகைய வரலாற்று சின்னங்கள் குறித்த விரிவான ஆய்வையும், பாதுகாப்புக்கான பணிகளையும் அரசு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 கோவை: ஆர்.எஸ்.புரம் அன்னபூர்ணேஸ்வரி கோயிலில், தீபாவளி பண்டிகையையொட்டி,  1,008 லட்டுகளால் கருவறை ... மேலும்
 
temple news
 தீபாவளி பண்டியை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; தீபாவளியை முன்னிட்டு திருப்பரங்குன்றம், திருநகர், பாண்டியன்நகர் கோயில்களில் ... மேலும்
 
temple news
 திண்டிவனம்: தீபாவளியை முன்னிட்டு, திண்டிவனத்தில் பெண்கள் கேதார கவுரி நோன்பு எடுத்து வழிப்பட்டனர். ... மேலும்
 
temple news
 விழுப்புரம்: விழுப்புரம் மழுக்கரமேந்திய அமைச்சார் அம்மன் கோவிலில் பக்தர்கள் சதுர்தசி நோன்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar