திருவள்ளூரை அடுத்துள்ள மணவூரிலிருந்து நான்கு கிலோமீட்டர். தொலைவிலுள்ள தலம். முருகப்பெருமான் ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு யோகமூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். மூலவருக்கு தேவியர் இல்லை. உற்சவருக்கு தேவியர் உண்டு இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர். இக்கோயிலை தரிசிக்க தடைசெய்யப்பட்ட பாதிரியார் ஒருவரை கோயிலுக்கு அழைத்தவந்து முருகன் தனது திவ்யதரிசனத்தைக் காண்பித்து அருள்புரிந்தார். பிரம்மனை சிறைவைத்து படைப்புத்தொழிலை மேற்கொண்ட முருகன் கோயில் இதுவென்றும் கருதப்படுகிறது. இங்கு முருகப்பெருமான் பிரம்மசாஸ்தா வடிவத்தில் கோயில் கொண்டுள்ளது சிறப்பான அம்சமாகும்.