Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நடுபழநி கோயில் பிரம்மசாஸ்தா வடிவத்தில் முருகன்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அழிக்க வந்து அருளினான்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 நவ
2017
01:11

வைகாசி மாதத்தில், முழு மதியும் விசாக நட்சத்திரமும் கூடிய திருநாளே வைகாசி விசாகம் எனப்படும். முருகனின் அவதார நோக்கமே சூரபத்மனை அழிக்கத்தான். இது சூரபத்மன் பெற்ற வரத்தின் படியே நடந்ததாகும். அவதாரம் என்ற சொல்லுக்கு கீழே இறங்கிவருதல் என்று பொருளாகும். உலகில் அதர்மம் தலைதூக்கி தர்மம் நிலை தடுமாறும்போது, மக்களின் துயர் துடைக்க இறைவன்  ஏதோ ஒரு உருவில் அவதரித்து நன்மை செய்வார். அப்படித்தான் முருகனும் சூரபத்மனை அழிக்க (ஆட்கொள்ள) அவதரித்தான். தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு சிறப்புண்டு. வைகாசி மாதத்தில் பல திருவிழாக்கள் கொண்டாடப்படுவதால் இதற்கு ஆன்மிக சிறப்புகள் பலவுண்டு. விசாகத் திருவிழா முருகன் கோயில்களில் மட்டுமல்லாமல் சிவன்கோயில்கள், அம்மன் கோயில்கள், வைணவ கோயில்கள் அனைத்திலும் சிறப்பாகக் கொண்டாடப்படுவதைக் காணலாம்.

27 நட்சத்திரங்களில் விசாகம் 16 ஆவது நட்சத்திரம் மக்கள் பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழத்தான் முருகன் விசாகத்தில் அவதாரமெடுத்தான். பெண் வயிற்றில் பிறக்காத ஆண் மகனால்தான் தனக்கு அழிவு நேரவேண்டும் என்று இயற்கைக்கு விரோதமாக வரம்பெற்றான் சூரபத்மன். இப்படி நடைபெற வழியில்லை என்ற ஆணவத்தில் 1,008 அண்டங்களை 108 யுகங்களாக ஆட்சிசெய்து உயிரினங்களை வதைத்தான். சிவபெருமான் சூரன் கேட்ட புதுமையான வரத்தின்படியே பெண் வயிற்றில் பிறக்கச் செய்யாமல் தன் ஆறுமுகங்களில் உள்ள நெற்றிக்கண் சுடரால் முருகனைத் தோற்றுவித்தார். ஆறுமுகனானவன் கந்தன், கடம்பன், கார்த்திகேயன், சரவணன், முருகன், விசாகன் குமரன் என்றழைக்கபட்டான். தக்கசமயம் வந்ததும் அவதார நோக்கத்தை சிவன் முருகனுக்கு எடுத்துக்கூறி தன் சக்திகள் அனைத்தையும் கொடுத்தார். பார்வதியும் தன் சக்திகளை ஒன்றினைத்து ஒரு வேலை உருவாக்கிக் கொடுத்தார். முருகன் திருச்செந்தூரில் சூரபத்மனை போரிட்டு அவனை ஆட்கொண்டான். அவன் உடலை இருகூறாக்கி ஒரு கூறு சேவல் மறுகூறு மயிலாக்கி கொண்டான். இங்கே அழித்தல் என்பது அருளன் என்றானதே சிறப்பு.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
குபேரன் சாந்தகுணம் உடையவர். ஒருவன் செல்வந்தன் ஆவதற்கு சாந்த குணமே (பொறுமையுடன் பணி செய்தல்) தேவை என்பதை ... மேலும்
 
செல்வத்தின் அதிபதி குபேரலட்சுமி. அட்சயதிரிதியை நாளில் குபேரலட்சுமியை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் ... மேலும்
 
பால், தேன், தாமரை, தானியம், நாணயம் ஆகியவை லட்சுமிக்குரியவை. இவற்றை பஞ்சலட்சுமி திரவியங்கள் என்று ... மேலும்
 
இலங்கைக்கு அதிபதியாக குபேரன் இருந்தான். அவனுடைய ஆட்சியில் மக்கள் செல்வவளத்துடன் வாழ்ந்தனர். அவனை ... மேலும்
 
குபேரனின் நிஜப்பெயர் வைச்ரவணன். பதவியால் ஏற்பட்ட பெயர் குபேரன். ஏகாஷிபிங்களி என்றும் பெயருண்டு. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar