பழநி, -பழநி அடிவாரம் அழகுநாச்சியம்மன், சின்னவிநாயகர் கோயில்களில் டிச.,6ல் நடக்க உள்ள கும்பாபிேஷகத்தை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. பழநி மலைக்கோயில் கிழக்குகிரிவீதியில் உள்ள அழகு நாச்சியம்மன் கோயிலில் கடந்த 1999ம் ஆண்டில் கும்பாபிேஷகம் நடந்தது. அதன்பின் இவ்வாண்டு நடந்த கும்பாபிேஷக திருப்பணியில் கோயில் மண்டபம், சிலைகளை புதுப்பிக்கும் திருப்பணிகள் நடக்கிறது. வரும் டிசம்பர் 6ல் மகா கும்பாபிேஷகம் நடக்கிறது. இதேபோல கிழக்குகிரிவீதி சின்னவிநாயகர் கோயிலிலும் கும்பாபிேஷகம் டிச.6ல்நடக்க உள்ளது. இதனையொட்டி நேற்று காலை 10:30மணிக்கு சின்னவிநாயகர்கோயில் மற்றும் அழகுநாச்சியம்மன்கோயிலில் சிறப்பு பூஜைசெய்து முகூர்த்தக்கால்கள் நடப்பட்டன. இதில் இணை ஆணையர் செல்வராஜ், கண்காணிப்பாளர் முருகேசன், பேஷ்கார் சீனி மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.