பதிவு செய்த நாள்
20
நவ
2017
01:11
மதுரை: ”ஆன்மிகத்தின் மூலமே நல்ல உலகை உருவாக்க முடியும்,” என பிரம்மா குமாரிகள் அமைப்பின் இயக்குனர் சந்தோஷ் பேசினார். மதுரையில் பிரம்மா குமாரிகள் அமைப்பின் ஆன்மிக திருவிழா நிறைவு நிகழ்ச்சி நடந்தது. நிர்வாகி செந்தாமரை வரவேற்றார். உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன், அமைச்சர்உதயகுமார், போலீஸ் ஐ.ஜி., சைலேஷ்குமார் யாதவ், மாநகராட்சி கமிஷனர் அனீஷ் சேகர், அமைப்பின் துணை மண்டல நிர்வாகி மீனாட்சி, சென்னை ஒருங்கிணைப்பாளர் பீனா பங்கேற்றனர். மகராஷ்டிரா, ஆந்திர மாநில இயக்குனர் சந்தோஷ் பேசியதாவது: உலகிற்கு ஆன்மிக சக்தியே வேண்டும். இச்சக்தி குறைவதன் மூலமே பிரச்னை ஏற்படுகிறது. இறைவனை நினைப்பதன் மூலமே ஆன்மிக சக்தியை பெறலாம். அதன் மூலமே நல்ல உலகமாக மாற்ற முடியும். இதற்கான தகுதி நம்மிடம் உள்ளது, என்றார். கலெக்டர் வீரராகவராவ் பேசியதாவது: தியானமே மனது, உடலை ஒருங்கிணைக்கும். இயற்கைக்கும், தியானத்திற்கும் ஒற்றுமை உண்டு. இயற்கையை நல்லபடியாக வைக்க வேண்டும். அன்றாடம் நமக்கு மனஅழுத்தம் ஏற்படலாம். மனதை லேசாக வைத்தால் பிரச்னையை சமாளிக்கலாம், என்றார்.நிர்வாகி கோமதி நன்றி கூறினார்.