சபரிமலை சாலக்காயத்திலிருந்து சன்னிதானம் வரை கேமராக்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22நவ 2017 11:11
சபரிமலை: சாலக்காயம் முதல் சன்னிதானம் வரை அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பத்தணந்திட்டை கலெக்டர் ஆர். கிரிஜா தலைமையில் கண்காணிப்பு நடைபெறுகிறது.
சாலக்காயம் முதல் சன்னிதானம் வரை 72 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பத்தணந்திட்டை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரின் அறை டிவியில் இணைக்கப்பட்டுள்ளது.
ஒரு நேரத்தில் 6 கேமராக்களில் இருந்து வரும் காட்சிகளை பார்க்க முடியும். இப்படி எல்லா கேமராக்களையும் பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது. கேமரா காட்சிகளை வைத்து கலெக்டர் உடனுக்குடன் அதிகாரிகளுடன் போனில் பேசி உத்தரவுகளை பிறப்பிக்கிறார்.
இதன் மூலம் நேரில் செல்லாமல், தேவையான நடவடிக்கைளை உடனுக்குடன் மேற்கொள்ள முடிவதாக கலெக்டர் கிரிஜா கூறினார். கலெக்டர் இல்லாத நேரத்தில் மாற்று அதிகாரி மூலம் கேமராக்கள் கண்காணிக்கப்பட்டு கலெக்டர் மற்றும் எஸ்.பி.க்கு தகவல் தரப்படுகிறது.