பதிவு செய்த நாள்
23
நவ
2017
12:11
வேலூர்: கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு, 160 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன என, அரசு போக்குவரத்துக் கழக, வேலூர் கோட்ட மேலாண்மை இயக்குனர் ரமேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழா, டிச., 2 ல் நடக்கிறது. விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் வசதிக்காக, வேலூர் கோட்டம் சார்பில், டிச., 1 முதல், 3 வரை, மூன்று நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில், வேலூரில் இருந்து, 100 பஸ்கள், திருப்பத்தூர், ஆற்காடு பகுதிகளில் இருந்து, தலா, 30 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. பக்தர்கள் எண்ணிக்கைக்கு தக்கபடி, மேலும் கூடுதல் பஸ்கள் இயக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.