பதிவு செய்த நாள்
24
நவ
2017
11:11
திண்டுக்கல், திண்டுக்கல் மலையடிவாரம் பத்ரகாளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. நேற்று காலை ஆறாம் கால யாக பூஜைகள், மகா பூர்ணாஹூதி, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. காலை 9:40 க்கு விமான கும்பாபிஷேகம், 10:00 மணிக்கு மூலஸ்தான கும்பாபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் அங்கு விலாஸ் செல்லமுத்தையா தலைமை வகித்தார். மாநகராட்சி ஏ.ஆர்.ஓ., சாரங்க சரவணன், ஹேப்பி சிட்டி இயக்குனர் கோபி, ஆடிட்டர் சிற்றம்பல நடராஜன், வழக்கறிஞர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், முன்னாள் மேயர் மருதராஜ், ஜி.டி.என். கல்லுாரி தாளாளர் ரத்தினம், எம்.எஸ்.பி., பள்ளி தாளாளர் முருகேசன், நியூ இந்துஸ்தான் நடராஜன், ஈஸ்வரி ஸ்டோர் உரிமையாளர் வாசுதேவன், அரசன் ரியல் எஸ்டேட் சண்முகம், சபிதா அண்ட் கோ சங்கரலிங்கம், ஹரிநாராயண பிளைவுட் பூபாலன், ஆராதனா சாம்பிராணி உரிமையாளர் செந்தில் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நிறுவன தலைவர் பாண்டி, உதவி தலைவர் வாசுதேவன், பொருளாளர் சம்பத்ராஜன் செய்திருந்தனர்.