பதிவு செய்த நாள்
27
நவ
2017
10:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா கடந்த, 23ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று நடந்த நான்காம் நாள் விழாவில், அதிகாலை, 3:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபி?ஷகம், பூஜை நடந்தது. காலை, 10:00 மணிக்கு வெள்ளி பல்லக்கு வாகனத்தில் விநாயகர், தங்க நாக வாகனத்தில் சந்திரசேகரர் சுவாமி வீதி உலா நடந்தது. இரவு, 9:00 மணிக்கு நடந்த பஞ்சமூர்த்திகள் வீதி உலாவில், வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர், வெள்ளி மயில் விமானத்தில், வள்ளி தெய்வானை சமேத சுப்பரமணியர், வெள்ளி கற்பக விருட்சம் வாகனத்தில், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேசுவரர், வெள்ளி காமதேனு வாகனத்தில், பராசக்தி அம்மன், வெள்ளி ரிஷப வாகனத்தில், சண்டிகேஸ்வரர் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.