Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருத்தகிரீஸ்வரர் கோவில் ... பழநி ஆண்டவர் கோவிலில் உழவாரப்பணி பழநி ஆண்டவர் கோவிலில் உழவாரப்பணி
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோழர்கள் வழிபட்ட லிங்கேஸ்வரர்
எழுத்தின் அளவு:
சோழர்கள் வழிபட்ட லிங்கேஸ்வரர்

பதிவு செய்த நாள்

28 நவ
2017
12:11

மடத்துக்குளம்: பலநுாறு ஆண்டுகளுக்கு முன், படையெடுப்புகளால் மக்கள் பாதிக்கப்பட்டது மட்டுமின்றி, கோவில்களும் சூறை யாடப்பட்டன. உடைக்கப்பட்ட கோவில் பாகங்கள் பல இடங்களில் கிடந்தன. கோவிலின் மற்ற பகுதிகளை மக்கள் பயன்படுத்த தவறினாலும், சில இடங்களில் காணப்பட்ட சிலைகளை எடுத்து சுத்தம் செய்து, வழிபட தொடங்கினர். இவை திறந்த வெளிகோவில் போல கிராமங்களில் உள்ளன.

மன்னர்கள் ஆட்சி காலத்தில் கடத்துார் கிராமம், ராஜராஜ நல்லுார் என அழைக்கப்பட்டது. அமராவதி ஆற்றங்கரையில் கடத்துாருக்கு அருகில் அமைந்திருந்த நஞ்சயபிள்ளைபுதுார் (தற்போதைய மடத்துக்குளம்), கண்ணாடிபுத்துார், கொமரலிங்கம், கொழுமம், கணியூர், சோழமாதேவி, கல்லாபுரம் ஆகிய ஊர்கள் சேர்த்து கரை வழிநாடுகள் என அழைக்கப்பட்டன. கரை வழிநாட்டில், 12ம் நுாற்றாண்டில் போர் நடந்தது. அப்போது, சோழர்கள் ஆட்சியில் நடந்த, இந்த போரில், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. இதில் சில கோவில்கள் சேதப்படுத்தப்பட்டன. சேதமடைந்த சிலைகள் போர்காலங்களில், பல இடங்களில் கிடந்தன. சிறிது காலத் துக்கு பின் போர் நிறுத்தம் ஏற்பட்ட நிலையில், போர் மனநிலையில் இருந்து மீண்ட மக்கள், சிலைகளை எடுத்து பராமரித்து வழிபட தொடங்கினர். இவை திறந்த வெளிகோவில் ஆனது. மடத்துக்குளம் அருகே கடத்துார் பகுதியின் பல இடங்களில் இதுப�ோல சிலைகள், கோவிலின் உடைந்த பகுதிகள் காடு மற்றும் ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்களில் தற் போதும் கிடக்கிறது. சில சிலைகளை மக்கள் வழிபடுகின்றனர். மக்கள் கூறுகையில், ‘கடத்துார் அர்ச்சுனேசுவரர் கோவிலுக்கு செல்லும் ரோட்டில், புதுாருக்கு அருகில், காட்டு பகுதியில் லிங்கேஸ்வரர் சிலை உள்ளது. இந்த இடத்தில், இந்த ஒருசிலை மட்டுமே உள்ளது. அருகில் கோவில் இருந்ததற்கான எந்த அடையாளமும் இல்லை. லிங்கத்தை பல தலைமுறையாகவழிபட்டு வருகிறோம். எண்ணெய் பூசி, திருநீறு, சந்தனம், குங்குமம் வைத்து வணங்குவோம். சிலர் மாலை நேரம் விளக்கு ஏற்றி வைப்பதும் உண்டு,’ என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; மார்கழி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை, உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரிய கோவில் வளாக தரையில், மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 
temple news
உடுமலை: சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவில் திருவிழா வரும் 16ம் தேதி சிறப்பு அலங்கார பூஜையுடன் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரி கலைமகள் சத்குரு தியாகராஜ சுவாமியின், 15ம் ஆண்டு ஆராதனை இசை விழா, வேதபுரீஸ்வர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar