பதிவு செய்த நாள்
29
நவ
2017
12:11
செஞ்சி : மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், ரூ.29 லட்சம் பணத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், உண்டியல் எண்ணும் பணி நேற்று நடந்தது. இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர்கள் பிரகாஷ், ஜோதி ஆகியோர் உண்டியல் எண்ணும் பணியை கண்காணித்தனர். இதில் பக்தர்கள் 29 லட்சத்து 32 ஆயிரத்து 520 ரூபாயும், 93 கிராம் தங்கமும், 424 கிராம் வெள்ளியும் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். அறங்காவலர் குழு தலைவர் ரமேஷ், அறங்காவலர்கள் ஏழுமலை, கணேசன், செல்வம், சரவணன், மணி, சேகர், கண்காணிப்பாளர் வேலு, ஆய்வாளர் அன்பழகன், ஊழியர்கள் மணி, சதீஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.